உலகம்

ஈரான் சரணடைய வேண்டும் .. அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை..!

ஈரானில் உள்ள ஃபோர்டோ யுரேனியம் செறிவூட்டும் மையத்தை தாக்கும் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் சரணடைய வேண்டும் .. அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை..!
ஈரான் சரணடைய வேண்டும் .. அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை..!
இஸ்ரேல்- ஈரான் இடையே மோதல் தொடங்கியுள்ள நிலையில், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். இதற்கு ஈரானின் உச்ச தலைவர் அபயதுல்லா அலி காமேனி, ஈரான் ஒருபோதும் சரண் அடையாது என்றும், இஸ்ரேல்- ஈரான் சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்" எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா? என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் "தான் அதை செய்யலாம், ஒருவேளை செய்யாமல் இருக்கலாம் எனக் கூறினார். தான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது என்றும், ஈரான் ஏராளமான சிக்கலில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஈரானின் எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புக்காக கூடுதல் போர் விமானங்கள், கப்பல்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரானில், உள்ள ஃபோர்டோ யூரேனியம் செறிவூட்டும் மையத்தை எப்படி தாக்குவது? எனும் திட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானை தாக்கும் திட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்திருந்தாலும் தாக்குதலை தொடுக்க உத்தரவு பிறப்பிக்கவில்லை எனத் தெரிகிறது.