உலகம்

பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. தாயின் ஆனந்தக் கண்ணீர்!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு பூமிக்கு திரும்பினார். சுபான்ஷு சுக்லா பத்திரமாக பூமிக்கு திரும்பியதால் அவரது தாய் ஆனந்த கண்ணீராக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா..  தாயின் ஆனந்தக் கண்ணீர்!
பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. தாயின் ஆனந்தக் கண்ணீர்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி ஆய்வை முடித்துக்கொண்டு, சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற மூவரும் வரும் ஜூலை 13ம் தேதி பூமிக்கு மீண்டும் திரும்பவார்கள் என்று கடந்த வாரம் தகவல் வெளியானது.

அதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுமார் 22 மணி நேரம் பயணித்து டிராகன் விண்கலம் பூமியை அடைந்தது. அமெரிக்காவின் கலிபோர்னியா அருகே பசிபிக் கடலில் டிராகன் விண்கலம் பாராசூட் மூலம் பத்திரமாகக் கடலில் தரையிறங்கியது. சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களுடன் வந்த டிராகன் விண்கலம் பத்திரமாகக் கடலில் இறங்கிய நிலையில், விண்கலத்திற்குள் வீரர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படையினர் விண்கலத்திலிருந்து வீரர்களைப் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய விமானப்படை விமானி சுபான்ஷு சுக்லா (ஜூன் 25) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து SpaceX நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம் -4' மனித விண்வெளி பயணத்திற்கான ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25ம் தேதி நண்பகல் 12 மணிக்குச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டனர்.

அமெரிக்காவை சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி மற்றும் சுபான்ஷு சுக்லா ஆகிய 4 பேரும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாள்கள் தங்கியிருந்து நுண்ஈர்ப்பு விசை மற்றும் சூழலுக்கு ஏற்ப எலும்புகள் செயல்படும் விதம்குறித்து ஆய்வு செய்தார். இஸ்ரோ, நாசா, ஆக்சியம் ஸ்பேசின் கூட்டு முயற்சியாக மனிதர்களை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆய்வினை வெற்றிகரமாக முடிவுபெற்ற நிலையில், தற்போது விண்வெளிக்கு சென்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தின் மூலம் மீண்டும் பூமியை நோக்கிப் பயணிக்க இருக்கின்றனர். அவர்கள் 13ம் தேதி புறப்பட்டு, மறுநாள் ஜூலை 14ம் தேதி பூமிக்கு வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 22 மணி நேரம் பயணித்து இன்று பூமிக்கு வந்தடைந்தனர்.

இந்திய விண்வெளி வீரரின் இந்தப் பயணம் இந்திய விண்வெளி சாதனையில் மேலும் ஒரு முக்கியமான முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர், விண்வெளியில் பல்வேறு விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, அதனை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.