உலகம்

இஸ்ரேல் – ஈரான் பகை என்ன? யார் பலம் வாய்ந்தவர்கள்? வெல்லப்போவது யார்?

ஈரான் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பகை என்ன? இவர்களில் யார் பலம் மிக்கவர்கள்? போர் மூண்டால் வெல்லப்போவது யார்?

இஸ்ரேல் – ஈரான் பகை என்ன? யார் பலம் வாய்ந்தவர்கள்? வெல்லப்போவது யார்?
இஸ்ரேல் – ஈரான் பகை என்ன? யார் பலம் வாய்ந்தவர்கள்? வெல்லப்போவது யார்?
காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் இன்றுவரை தாக்குதல் நடத்தி வருகிறது. மறுபுறம், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருவதோடு, பலமுறை இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தும் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆயுதங்களை சப்ளை செய்வதை ஈரான் நிறுத்தியப்பாடில்லை.

எந்த நாட்டிற்கும் எந்த நாடு வேண்டுமானாலும் ஆயுதங்கள் சப்ளை செய்யலாம், ஆனால் அவை நேரடியாக போர் களத்தில் குதித்தால் மட்டுமே அது மோதலாக மாறும். அந்தவகையில், ஹமாஸூக்கு ஆதரவாக இருந்த ஒரே காரணத்திற்காக ஈரானை சீண்டிவிட்டது.

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ஆயுதப்படைத் தலைமைத் தளபதி முகமது பகேரி மற்றும் மூத்த புரட்சிகர காவல்படை தளபதி கோலம் அலி ரஷீத், அணு விஞ்ஞானிகள் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி மற்றும் ஃபெரேடவுன் அப்பாசி ஆகியோர் கொல்லப்பட்டனர். அதேபோல் ஈரானின் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமியும் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலைப் பழிவாங்குவதாக சபதம் எடுத்துள்ள ஈரான், இஸ்ரேலை அமெரிக்காத்தான் இயக்குகிறது என்றும், குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனிடையே, இஸ்ரேலை பழிவாங்க தயாராகிக் கொண்டிருந்த ஈரான், அணு ஆயுதத் தயாரிப்பில் இறங்கியதாக இஸ்ரேலிய உளவுத் துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். அதாவது, ஈரான் அதிகளவில் யுரேனியத்தைச் சேமித்து அணு ஆயுதங்களைக் குறுகிய காலத்திற்குள் தயாரிக்க காய் நகர்த்தி வருவதாகவும், இதன் காரணமாகவே ஈரானின் அணு ஆயுத நிலையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்கியதாகவும் உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக, 'ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு' என்ற பேச்சு அடிப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து அறிந்துக் கொண்ட இஸ்ரேல் ஈரான் மீது தொடர் தாக்குதலை நடத்த தொடங்கியது. கடந்த ஜூன் 12 ஆம் தேதியனறு ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது ”ஆபரேஷன் ரைசிங் லயன்” என்றப் பெயரில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரான் கொடுத்த பதிலடியில், ஒரு பெண் உட்பட குறைந்தது இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், ”ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3” என்றப் பெயரில் ஈரான் மீண்டும் தாக்குதலை தொடர்ந்திருக்கும் நிலையில், இந்தத் தாக்குதலின் ஏவுகணைகள் பலவற்றை இஸ்ரேல் தடுத்தாலும், அடுக்கடுக்கான ஏவுகணைகளை ஈரான் ஏவுவதால் ஈரான் கடும் கோபத்தில் இருந்து வருகிறது.

இத்தையச் சூழலில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேலின் 'டெல் அவிவ் பொருளாதார மையம், பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டிடம், நிதியமைச்சகத்தின் கட்டிடம், Tel Nof விமானத்தளம், Haifa-வில் சில இடங்கள், காசா கடல் எல்லைக்குள் இஸ்ரேல் எண்ணெய் எடுக்கும் தளம் என 6 இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான்.

இந்த நிலையில், இஸ்ரேல் Vs ஈரான் போர் மூண்டுள்ள நிலையில், இதில் வெல்லப்போவது யார்? யாரிடம் அதிக உள்ளது? போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

பரப்பளவு, மக்கள் தொகை, ராணுவ வீரர்கள், ராணுவத்திற்கான செலவுகள், விமானப்படை போன்றவற்றில் இஸ்ரேலைவிட ஈரான் முந்தியுள்ள நிலையில், போர் விமானங்கள், பீரங்கிகள், அணு ஆயுதங்கள் என நவீன ஆயுதங்களோடு பலமிக்க ஒன்றாக இஸ்ரேல் திகழ்கிறது.

அது மட்டுமல்லாமல், ஐ.ஐ.எஸ்.எஸ் அறிக்கைகளின்படி, ஈரானின் கடற்படையில் சுமார் 220 கப்பல்கள் உள்ள நிலையில், இஸ்ரேலிடம் சுமார் 60 கப்பல்கள் உள்ளன. என்னத்தான் இஸ்ரேலிடம் குறைவாக இருந்தாலும், அவற்றின் ஒவ்வொரு ஆயுதமும் ஈரானின் 100 ஆயுதங்களுக்கு சமமாகும்.

எண்ணிக்கைகளைத் தாண்டி இஸ்ரேலின் தொழில்நுட்பம் மிகவும் Advanced என்பதோடு, அமெரிக்காவின் ஆதரவு இஸ்ரேலுக்கு உள்ளதால், இஸ்ரேலை எதிர்கொள்வதில் ஈரானுக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.