K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

தி மியூசிக் அகாடமி விழா.. இளம் பரதக் கலைஞர் மிருதிகாவுக்கு 'நிருத்ய மயூரி' விருது!

சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தவெக கூட்டணி கனவில் எடப்பாடி பழனிசாமி.. பகல் கனவு பலிக்காது என செல்வப்பெருந்தகை அதிரடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டுவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அது பலிக்காத பகல் கனவு என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

உலகின் தலைசிறந்த புத்தாக்க மையமாகத் தமிழகத்தைக் கட்டமைப்பதே திராவிட மாடல் கனவு.. கோவை புத்தொழில் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

கோவையில் நடந்த புத்தொழில் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதில் புத்தொழில் நிறுவனங்களின் பங்கை வலியுறுத்தினார். TANSIM மூலம் ஸ்டார்ட்அப்கள் ஆறு மடங்கு வளர்ந்திருப்பதாகவும், பாதியளவு நிறுவனங்களுக்குப் பெண்களே தலைமை தாங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

வடசென்னையை ஆட்டிப் படைத்த தாதா.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

வடசென்னையின் பிரபல தாதாவாக அறியப்பட்ட நாகேந்திரன், உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று (அக். 8) உயிரிழந்தார்.

கரூர் சம்பவம்: வதந்திகளை நம்பாதீங்க, கல்லடிகளை நான் தாங்க வேண்டும் - ராஜ்மோகன் உருக்கம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் தனிப்பட்ட முறையில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த தவெக செய்தித் தொடர்பாளர் ராஜ்மோகன், யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சீமான் - விஜயலட்சுமி வழக்கு: இருவரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரிய நிலையில் வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த திருமண மோசடி வழக்கில், இரு தரப்பினரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி சமரசம் செய்துகொண்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் வழக்கை இன்று (அக். 8) முடித்து வைத்து உத்தரவிட்டது.

"லக்கி பாஸ்கர்" unlucky பாஸ்கர் ஆன கதை: சொகுசு கார் மோசடியில் அமலாக்கத்துறை வளையத்தில் துல்கர் சல்மான்!

சொகுசுக் கார்களைப் போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து, ஹவாலா மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், நடிகர் துல்கர் சல்மான் தொடர்புடைய கேரளா, தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) தீவிரச் சோதனை நடத்துகிறது.

கரூர் துயரச் சம்பவம்: கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் துப்புரவுப் பணிகள் நிறைவு; வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நிவாரணம் கோரிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் 10 நாட்களுக்குப் பின் துப்புரவுப் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, 12 நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன.

10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்த மாதம்பட்டி ரங்கராஜ் - மகளிர் ஆணையத்தில் பரபரப்புப் புகார்!

பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

91 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டதால் பொதுமக்கள் கலக்கம்!

சர்வதேசப் பொருளாதார மாற்றங்களால், தங்கத்தின் விலை இன்று (அக். 8) இரண்டாவது முறையாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 91,080 என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.