Today Headlines :06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 14-10-202
Today Headlines :06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 14-10-202
Today Headlines :06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 14-10-202
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 16-ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னைக்கு திரும்புவதால், பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் என வரிசை கட்டி நிற்கிறது. இதனால், சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கனமழை காரணமாக ஓடையில் உடைப்பு ஏற்பட்டதால், வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோக்கள் கசிந்ததை அடுத்து, சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோயில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிசா சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதையில் தனியார் பேருந்து தேங்கிய மழைநீரில் சிக்கியது.