K U M U D A M   N E W S

பள்ளியில் சர்ச்சை பேச்சு.! கைதான மகாவிஷ்ணு - அன்பில் மகேஷ் விளக்கம்

மகாவிஷ்ணு கைது கைது செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தியதாக மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விவகாரம் இப்போது காவல்துறை வ்சம் சென்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

புத்தகக் கண்காட்சியில் சாமி ஆடிய மாணவிகள்.. அமைச்சர் மூர்த்தி பரபரப்பு விளக்கம்!

''மாமதுரை என்பது எல்லா சமுதாயமும் எல்லோரும் இருக்கக்கூடியது. நமது திராவிட மாடலும் அதற்குள் அடங்கும். நானும் மாவட்ட ஆட்சியரும் பிரமாதமாக புத்தக கண்காட்சியை நடத்தினோம் என்பது உங்கள் மனசாட்சிக்கு தெரியும்'' என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

ரீல்ஸ் வீடியோ விபரீதம்.. போட்டுத் தள்ளிய பாம்பு!

ரீல்ஸ் வீடியோவுக்காக, பாம்புக்கு மவுத் கிஸ் கொடுத்த இளைஞரை, அந்த பாம்பு தீண்டியுள்ளது. இதனால் உடலில் விஷம் ஏறி அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..10 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு, அருள், சந்தோஷ், ராமு, திருமலை உள்பட 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எந்த காவல் நிலையத்தில் இருக்கிறார்? - மஹா விஷ்ணுவை தேடி அலையும் சகோதரர்

சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைதான மகாவிஷ்ணுவை தேடி. அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

RS Bharathi : மணிப்பூர், குஜராத்தை விட தமிழகத்தில் குற்றங்கள் பெரிதாக நடக்கவில்லை.. சொல்கிறார் ஆர்.எஸ்.பாரதி

RS Bharathi : மணிப்பூர் உத்திரபிரதேசம் குஜராத் மாநிலத்தில் உள்ள சம்பவங்களை விட, தமிழகத்தில் பெரிதாக ஒன்று குற்றசம்பவங்கள் நடக்கவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

மகா விஷ்ணு விவகாரம்: ”ஒரு பூனையை புலியாக்கிய பெருமை திமுக அரசுக்கு..” நாராயணன் திருப்பதி கடும் விமர்சனம்

BJP Narayanan Tirupati About Maha Vishnu Controversy : மகா விஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரத்தில் ஒரு பூனையை புலியாக்கிய பெருமை தான் திராவிட மாடல் அரசுக்கு என விமர்சித்துள்ளார் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி.

அரசு பள்ளியில் ஆன்மிகம் போதிக்க வேண்டிய அவசியம் என்ன? - அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கிய சீமான்

அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது கூட தெரியாமல், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது 

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

மருத்துவ மாணவி கொலை: தாமதமாக வந்த சிபிஐ வழக்கறிஞர்.. கடும் கோபமடைந்த நீதிபதி!

''சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்து 24 நாட்கள் கடந்து விட்டன. ஆனால் இந்த வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? என்று நாட்டு மக்கள் கேட்கின்றனர். சிபிஐ நடந்து கொள்வதை பார்த்தால் இந்த வழக்கில் சீரியஸாக செயல்படவில்லை என்பது தெரிகிறது'' என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.