K U M U D A M   N E W S
Advertisement

Udhayanidhi Stalin : 'இனி இப்படி செய்யாதீங்க'.. ஆசிரியர்களிடம் கோரிக்கை வைத்த உதயநிதி ஸ்டாலின்!

Minister Udhayanidhi Stalin Request Teacher : ''திராவிட மாடல் ஆட்சியில் கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு தனியார் பள்ளிகள் அளிக்கும் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமாக உள்ளது. மாணவ-மாணவிகள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Filmfare Awards 2024: பிலிம்பேரில் மாஸ் காட்டிய 'சித்தா' படம்.. 7 விருதுகளை தட்டித் தூக்கி அசத்தல்!

Filmfare Awards 2024 : பிலிம்பேர் விழாவில் கிட்டத்தட்ட அனைத்து பிரிவு விருதுகளையும் வென்ற 'சித்தா' திரைப்படம் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசியதும், இந்த படத்துக்கு தமிழக மக்கள் பெரும் வரவேற்பு அளித்ததும் குறிப்பிடத்தக்கது. 'சித்தா'வுக்கு அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன் 2'ம் பாகம் பல விருதுகளை தட்டிச் சென்றது.

'பஞ்சாயத்து ஓவர்'.. நெல்லை மேயர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிவிப்பு!

நெல்லை மேயருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு போட்டியிடுவார் என கே.என்.நேரு-தங்கம் தென்னரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி 25வது வார்டு கவுன்சிலராக இருந்து வரும் ராமகிருஷ்ணன், 3வது முறையாக நெல்லை மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் மனைவி, குழந்தைக்கு கொலை மிரட்டல்.. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு வந்த மர்ம கடிதம் தொடர்பாக மகாபலிபுரம் படூர் பகுதியை சேர்ந்த பள்ளி வேன் ஓட்டுநர் சதீஷ் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு.. பாஜக நிர்வாகியை தட்டித் தூக்கிய போலீஸ்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இருந்த கபிலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Weather Update: இந்தியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. எந்தெந்த மாநிலங்களில் ரெட் அலர்ட்?.. முழு விவரம்!

கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் ஆகஸ்ட் 6ம் தேதி வரை அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆகஸ்ட் 7ம் தேதி வரை கனமழை தொடரும் என்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஆகஸ்ட் 5ம் தேதி (நாளை) வரை கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று 2வது ஒருநாள் போட்டி.. இந்திய பேட்ஸ்மேன்கள் vs இலங்கை ஸ்பின்னர்கள்.. வெற்றி பெறப்போவது யார்?

இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா நல்ல பார்மில் உள்ளார். ஆனால் சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி விளையாடவில்லை. இதேபோல் ஷிவம் துபேவும் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார்.

'தாமரை மலர்ந்தே தீரும்'.. மீண்டும் பழைய பாணியை கையிலெடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்!

''திமுகதான் சமூகநீதியை பாதுகாத்து வருகிறது என்று தொடர்ந்து கூறி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை-முதலமைச்சர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்க முடியுமா?'' என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உருக்குலைந்து போன வயநாடு.. 350ஐ கடந்த உயிரிழப்பு.. இறுதி கட்டத்தை எட்டிய மீட்பு பணி!

''இதுவரை 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 148 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 67 உடல்களை அடையாளம் காண முடியவில்லை'' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

4 நாளாக தண்ணீருக்கு நடுவே பரிதவிக்கும் நாய்.. ட்ரோன் மூலம் உணவு... நீதிமன்றம் வரை சென்ற விஷயம்!

மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் தாண்டி பாறைகளுக்கு நடுவே ஒரு நாய் ஒன்று சிக்கிக் கொண்டது. சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து செல்வதால் அந்த நாயால் கடந்த 4 நாட்களாக கரைக்கு வர முடியவில்லை. அந்த நாய் சுற்றிலும் ஓடும் தண்ணீருக்கு நடுவே தனித்தீவு போல் உள்ள பாறையில் சிக்கி பரிதவிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது.