K U M U D A M   N E W S

பள்ளிகளுக்கு விடுமுறை.. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளுக்கு அந்தந்த தலைமையாசிரியர்கள் முடிவு எடுக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை நடுங்க விட்ட விவகாரம்.. என்ன சொல்லபோகிறார் நீதிபதி

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அதிமுக, பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

விடிந்ததும் பாய்ந்த கார்கள்.. சென்னையில் பரபரப்பை கிளப்பிய IT ரெய்டு

சென்னையில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். பாலிஹோஸ் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது.

"கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.100 கோடி கேட்கிறார்கள்.." - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

கூட்டணிக்கு வருபவர்கள், 20 சீட் அல்லது 100 கோடி ரூபாய் ரொக்கமாக கேட்பதாக திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

"Free..Free.." ஆதவ் அர்ஜுனா கொடுத்த முக்கிய அப்டேட்

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ள FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக காணலாம் என இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

‘அகதி போல் அலையும் நிலை வரும்’ - காயத்தோடு போராட்டத்தில் பங்கேற்ற சீமான்

இங்குள்ள ஆட்சியாளர்கள் அகதி போல் அலைய வேண்டிய நிலை வரும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஆள்மாறாட்டம்.. கோடிக்கணக்கில் டிஜிட்டல் மோசடி.. அசாம் மாநில நபர் கைது

மும்பை போலீஸ் போன்று ஆள்மாறாட்டம் செய்து டிஜிட்டல் கைது [Digital Arrest] செய்து மோசடியில் ஈடுபட்ட அசாம் மாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அஜித் சாருக்கும் எனக்கும் போட்டியா? - அருண்விஜய் ஓபன் டாக்

நடிகர் அஜித் குமார் ரசிகர்கள் தன்னையும் நேசிப்பதாகவும், அவர் தனக்கு போட்டியில்லை என்றும் நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய் பற்றி திருமாவிடம் வெளிப்படையாக கேள்வி கேட்ட செய்தியாளர்..! - அடுத்த நொடியே வந்த Thug பதில்

அச்சுறுத்தலை ஏறுபடுத்தவே தனி நபர்கள், தமிழ்நாட்டு நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறையை மத்திய அரசு ஏவி விடுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

‘ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிகிறேன்’... மனைவி சாய்ரா அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.