K U M U D A M   N E W S

தொகுதிப் பார்வையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்.... எப்போதும் உழைக்க வேண்டும்!

தலைவர் கலைஞர் தனக்குப் பிடித்த ஊரின் பெயராக, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ‘எப்போதும் வென்றான்’ ஊரைச் சொல்வார். எப்போதும் வென்றானாக நாம் பெயர் பெற வேண்டும் என்றால், எப்போதும் உழைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆடு விற்பனை.. ரூ.8 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆட்டுச்சந்தையில் ரூ.8 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

அரசுப்பேருந்தில் ஏற்பட்ட திடீர் விபத்து... நடுவழியில் தவித்த பயணிகள்

சென்னை எழும்பூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்தின் பக்கவாட்டு பகுதி சரிந்து விழுந்தது. நீண்ட நேரம் போராடியும் சரிசெய்ய முடியாததால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

விஜய் கொடுத்த சிக்னல் விசிகவுக்கு இல்லை.. அதிரடி விளக்கம் கொடுத்த அரசியல் விமர்சகர்

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என விஜய் தெரிவித்திருப்பது விசிகவுக்கான சிக்னல் இல்லை. விசிகவை ஆதரிக்கும் மக்களுக்கு கொடுக்கும் சிக்னல் என அரசியல் விமர்சகர் மதூர் சத்யா தெரிவித்துள்ளார்.

லாட்டரி அதிபர் மார்டின் முறைகேடு வழக்கு... விசாரணையை தொடர அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

லாட்டரி அதிபர் மார்டினுக்கு எதிரான முறைகேடு வழக்கை முடித்து வைத்த நீதிமன்றத்தின் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இந்த விசாரணையை அமலாக்கத்துறை தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

“தமிழக வெற்றிக் கழகத்தால் திமுகவின் கவனம் சிதறாது..” விஜய்க்கு தக் லைஃப் கொடுத்த மா சுப்ரமணியன்!

திராவிட மாடல் எனக் கூறிக்கொண்டு திமுக மக்களை ஏமாற்றுவதாக, தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் விமர்சித்திருந்தார். இதற்கு அமைச்சர் மா சுப்ரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை.. எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்தது. உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். 

Diwali Special Bus: தீபாவளிக்கு சொந்த ஊர் போகணுமா..? சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் ரெடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தனியார் நிறுவனத்தில் 5 நாட்களாக IT Raid... சிக்கிய கோடிக்கணக்கான பணம்

ஆதித்யா பேப்பர் பிரைவேட் லிமிடெட், லட்சுமி டூல்ஸ், புல் மிஷின் ஆகிய நிறுவனங்களில் 5 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதில் ரூ.42 கோடி சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்.. கொந்தளித்த மக்கள்...

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.