K U M U D A M   N E W S

நீதிபதிகள் குறித்து சர்ச்சை கருத்து... R.S. பாரதிக்கு எதிரான மனு தள்ளுபடி... உயர்நீதிமன்றம் அதிரடி!

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

"குறைந்தபட்ச ஊதியம் வேண்டும்.." ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் ரூ.665ஐ வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வயநாடு தேர்தலில் போட்டியா..? குஷ்பூ விளக்கம்

வயநாடு மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் குஷ்பூ போட்டியிடுவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதற்கு குஷ்பூ மறுப்பு தெரிவித்துள்ளார்.

DD தொலைக்காட்சி அலுவலகம் முன்பு திமுக போராட்டம்

சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவோடு இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்தி மாத கொண்டாட்டம்... பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம்  கொண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

நீட் கோச்சிங் சென்டரில் மாணவர்கள் மீது தாக்குதல்... வேட்டையன் பட பாணியில் அத்துமீறல்... பகீர் வீடியோ

நெல்லையில் தனியார் நீட் கோச்சிங் சென்டரில், மாணவர்கள் மீது ஆசிரியர் கொடூரமாக தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பச்சை பால் பாக்கெட் சர்ச்சை.. விளக்கமளித்த ஆவின்

ஆவின் பச்சை பால் பெயர் மாற்றப்பட்டு, விலை உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அந்நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

த.வெ.க மாநாடு மழையால் தடையா?.. 22ஆம் தேதி மீண்டும் மழைக்கு வாய்ப்பு

வரும் 22ஆம் தேதி மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழ்நாட்டில் உள்ள வட மாவட்டங்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகள்களை மீட்டு தரகோரி ஆட்கொண்டர்வு மனு.. ஈஷா யோகா மையத்துக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு

ஈஷா யோகா மையத்தில் தங்களின் மகள் இருப்பதாகவும், அவர்களை மீட்டு தர கோரியும் பெண்களின் தந்தை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கோணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

முற்றும் திமுக - கம்யூ., மோதல்

மதுரையில் இன்று நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான பேருந்து துவக்க விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசனும் அக்கட்சியின் மாநகராட்சி துணை மேயர் நாகராஜனும் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.