செட் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவுள்ளதாக அறிவிப்பு!
செட் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி முடித்தப் பின்னர் 4000 உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கான நேரடி தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
செட் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி முடித்தப் பின்னர் 4000 உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கான நேரடி தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்ற வீராங்கனைகள் திட்டத்தை செயல்படுத்த ரூ.3.87 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 100 மின்சார ஆட்டோ வாங்க ரூ.3.77 கோடியும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ரூ.10.80 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கலந்தாய்வுக் கூட்டம் தொடங்கியது. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையிலான கூட்டத்தில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகின்றனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருவள்ளூர் பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் - காரணி இடையேயான உயர்மட்ட மேம்பால பணிகளை துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை நடத்துக் கூடாது, அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் வைக்கப்பட்ட பேனர்கள் மீது கருப்பு மை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் திமுக அரசு மூக்கை நுழைப்பதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உரிமைகள் பறிபோகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அசாம் மாநிலத்தின் திபலாங் பகுதியில் அகர்தலா விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.