ஒரு உயிர் கூட போகக் கூடாது... அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து ஐயப்பன் என்பவர் உயிரிழந்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் சீரான மின்விநியோகம் கோரி அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக் 8ம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விருது விழாவில் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது.
வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, மழையால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் செய்பட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்ற நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
நாகை கோடியக்கரை அருகே பைபர் படகு மீது விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து செருதூர் பகுதி மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
TVK Flag Issue : தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெறுவதை தடுக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதியிருந்தது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள தேர்தல் ஆணையம், தவெக கொடியை பயன்படுத்த எந்த பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகர் நரிமேடு பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசின் நேந்திர வித்யாலயா, காளவாசல் அருகே பொன்மேனி பகுதியில் உள்ள ஜீவனா மற்றும் சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் ஆகிய பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.
Gold Rate Today in Chennai : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 7,535க்கு விற்பனையாகிறது.