K U M U D A M   N E W S

Chennai Rain Update : சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Chennai Rain Update : சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு சர்ச்சை.. கர்நாடகாவில் இருந்து வந்து இறங்கிய நெய்

Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு கலப்பட சர்ச்சைக்கு பின் கர்நாடகா மில்க் ஃபெடரேஷனின் நந்தினி பிராண்ட் நெய்யை தேவஸ்தானம் கொள்முதல் செய்கிறது. டேங்கர் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட நெய் திருப்பதிக்கு வந்தடைந்தது.

தவெக மாநாட்டுக்கு அனுமதி மறுப்பா..? வெளியான தகவல்.. எஸ்.பி. விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் விழுப்புரம் எஸ்.பி விளக்கமளித்துள்ளார். 

குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர்.. மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் மட்டும் பெயர் வைத்ததன் மூலம் தமிழர்கள் மீது இந்தி திணிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Devara: ரிலீஸுக்கு முன்பே 100 கோடி வசூல்..? பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ஜூனியர் என்டிஆரின் தேவரா!

Actor Junior NTR Devara Movie Box Office Collection : ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா திரைப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thiruchendur : முருகனை தரிசிக்க ரூ.1,000 கட்டணம்.. அதிர்ச்சியில் பக்தர்கள்..

Thiruchendur Murugan Temple Darshan Ticket Price : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விரைவு தரிசனத்திற்கு சிறப்பு கட்டணம் ரூ.1,000 ஆக கோயில் நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. ரூ.100-க்கு மேல் தரிசன கட்டணம் வசூலிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கோயில் நிர்வாகம் விதித்துள்ள கட்டணம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

காரில் இருந்த 5 சடலங்கள்.. வெளியான பகீர் தகவல்

புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே காரில் இருந்து 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

Lipstick Issue : நானும் லிப் ஸ்டிக் போடப் போறேன்.. மாதவிக்கு ஆதரவாக களமிறங்கி கவுன்சிலர் உமா ஆனந்தன்

Lipstick Issue in Ripon Building at Chennai : அடுத்த முறை நானும் பளிச்சென்று லிப் ஸ்டிக் போட்டு மாநகராட்சி கூட்டத்திற்கு செல்ல இருக்கிறேன் என்று பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பசங்களா ஹேப்பியா !காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

தமிழகத்தில் பள்ளி காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 6ம் தேதி வரை விடுமுறை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜகா கேட்ட இபிஎஸ் ....தடா போட்ட தயாநிதி...Tired ஆன நீதிமன்றம்

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞர் பதில் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அக்டோபர் 16 தேதி இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.