K U M U D A M   N E W S

Squid Game 2 Teaser: ஆட்டம் இனிதான் ஆரம்பம்... மிரட்டலாக வெளியானது ஸ்க்விட் கேம் 2 டீசர்!

பிரபல கொரியன் வெப் சீரிஸ்ஸான ஸ்க்விட் கேம் சீசன் 2 டீசர் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

SS ஹைதராபாத் பிரியாணி கடைக்கு சீல்

சென்னை கொடுங்கையூர் பகுதியில் அமைந்துள்ள SS ஹைதராபாத் பிரியாணி கடையில் சாப்பிட்ட 14-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கடைக்கு சீல் வைத்தனர் 

உதயநிதி துணை முதலமைச்சராவார்... அடித்து சொன்ன அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கலைஞர் எப்படி ஸ்டாலினை உருவாக்கினாரோ அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக உதயநிதியை துணை முதலமைச்சராக உருவாக்குவார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தரமற்ற உணவு விற்பனை.. பிரபல ஹோட்டலுக்கு சீல்

கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஹோட்டலில் உணவை உட்கொண்ட சிறுமி உட்பட 4 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஹோட்டலில் ஆய்வு செய்த அதிகாரிகள் காலாவதியான உணவுப் பொருட்களை வைத்திருந்ததை கண்டறிந்து கடைக்கு சீல் வைத்தனர்.

தமிழ்நாட்டில் அனல் பறக்கப்போகுதாம்... வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் மக்களே!

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (20.09.2024 மற்றும் 21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

“YRS காங். மீது பொய் வழக்கு போடுவதே சந்திரபாபு நாயுடுவின் வேலை..” லட்டு விவகாரத்தில் ஜெகன்மோகன் பதிலடி!

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, YRS காங். மீது பொய் வழக்கு போடுவதே சந்திரபாபு நாயுடுவின் வேலை, அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

குண்டர் சட்டம்... தேவையான சட்டத் திருத்தம்... தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுத்தல்!

மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

சர்ச்சையான 'திருப்பதி லட்டு' - நெய் சப்ளை நிறுவனம் விளக்கம்

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், எங்கள் நெய்யின் தரத்தில் குறை இருப்பதாக நினைத்தால் அதை எங்கு வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் என நெய் சப்ளை நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

சூட்கேசில் பெண் உடல்.. தரதரவென இழுத்து சென்ற கொடூரன் - அதிர்ச்சி காட்சி வெளியீடு

சென்னை துரைப்பாக்கம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்டு உடலை சூட்கேசில் வைத்து இழுத்து செல்லும் சிசிடிவி வெளியானது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் 15 பேர் மீது குண்டாஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏற்கனவே 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் மேலும் 15 பேரை குண்டாசில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளது.