K U M U D A M   N E W S
Advertisement

மதுரை: அமைச்சர் வீட்டின் அருகே நாதக நிர்வாகி படுகொலை.. என்ன செய்கிறது போலீஸ்?.. சீமான் ஆவேசம்!

கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது நாதக நிர்வாகி ஒருவர், அமைச்சர் வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

Sardar 2: கார்த்தியின் சர்தார் 2-வில் சம்பவம் இருக்கு... என்ட்ரியான எஸ்ஜே சூர்யா!

கார்த்தியின் சர்தார் 2ம் பாகத்தில் எஸ்ஜே சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்ட 20 வயது இளைஞர்.. யார் இந்த மேத்யூ க்ரூக்ஸ்? என்ன காரணம்?

படிப்பில் சிறந்து விளங்கிய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் கணிதம் மற்றும் அறிவியலில் சிறந்த படிப்புக்காக விருதுகளையும், பரிசுகளையும் வென்றுள்ளார். இவரது பின்புலத்தை ஆராய்ந்து FBI அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Viduthalai2 First Look: வெற்றிமாறனின் விடுதலை 2 ஃபர்ஸ்ட் லுக்... சர்ப்ரைஸ்ஸாக வெளியான அப்டேட்!

Viduthalai 2 First Look Launch Date : வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடுதலை 2ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்து ரீல்ஸ் வீடியோ.. பாய்ந்தது வழக்கு.. மன்னிப்பு கேட்ட ஹர்பஜன் சிங்!

'நாங்கள் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்று அந்த வீடியோவை வெளியிடவில்லை. 15 நாட்கள் தொடர்ந்து விளையாடியதால் எங்களின் உடல்வலியை குறிப்பிடும் வகையிலேயே ரீல்ஸ் வெளியிட்டோம். இந்த வீடியோ மூலம் யார் மனதாவது புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்''

Indian2 Box Office: மொத்தமாக படுத்துவிட்ட இந்தியன் 2... 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவு தானா?

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 கடந்த வாரம் வெளியான நிலையில், இந்தப் படத்தின் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் சோகம்.. பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்!

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதிவிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து ராணுவ தளபதி ராஜ்நாத் சிங்கிடம் விளக்கி கூறியுள்ளார்.

மின் கட்டண உயர்வு: தேர்தல் வெற்றிக்கு திமுகவின் பரிசு.. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி சாடல்!

''விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் அரசு குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு''

'அந்தியோதயா' ரயில் 9 நாட்கள் ரத்து.. 'வைகை' புறப்படும் இடம் மாற்றம்.. முக்கிய அறிவிப்பு!

சென்னை எழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் 'ராக்போர்ட்' அதிவிரைவு ரயில் வரும் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரையும், ஆகஸ்ட் 1ம் தேதியும் எழும்பூருக்கு பதிலாக இரவு 12.40 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்லும்.

மின்கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்?.. அடுக்கடுக்கான காரணங்களை பட்டியலிட்டு மின்வாரியம் விளக்கம்!

'தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்த வழி இருந்தும், சென்ற ஆண்டு 2.18 சதவீதம் மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது' என்று மின்வாரியம் கூறியுள்ளது.