K U M U D A M   N E W S
Advertisement

எஸ்.ஜே.சூர்யாவுக்கு எவ்வளவு தீணிக் கொடுத்தாலும் பத்தாது- நடிகர் கார்த்தி புகழாரம்

நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு எவ்வளவு தீணி கொடுத்தாலும் பத்தாது என்றும், அவர் கேட்டு கேட்டு நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

மியான்மர் நிலநடுக்கம்- தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளதாகவும், 3,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் நாளை முதல் இ-பாஸ் நடைமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரியில் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவித்துள்ளார். வார நாட்களில் 6,000 வாகனங்களும், வார இறுதியில் 8,000 வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான பெண்கள் கபடி போட்டி.. தமிழக அணி வெண்கல பதக்கம் வென்று சாதனை!

தேசிய அளவிலான சப் ஜூனியர் பெண்கள் கபடி போட்டியில், தமிழக பெண்கள் கபடி அணியினர் வெண்கல பதக்கம் வென்று சாதனைப்படைத்த கபடி வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில், சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விஜயை எதிர்த்து போட்டியிடுவேன்.. பவர் ஸ்டாருக்கு போன் போட்ட தவெக நிர்வாகி

விஜயை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறிய நடிகர் பவர் ஸ்டாருக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகி போன் செய்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

IPL 2025: மும்பை சொந்த மண்ணில் முதல் வெற்றி பெறுமா? கொல்கத்தா - மும்பை அணிகள் இன்று மோதல்!

டி20 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு தொடரில் தங்களுடைய முதல் வெற்றியை பெறுவதற்கு போராடி வருகிறது. அதே போல் 3 முறை கோப்பைகளை வென்ற அணியும், நடப்பு சாம்பியனுமான கொல்கத்தா அணி, தங்களுடைய 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. 2 பலம் வாய்ந்த அணிகளும் மோதும் போட்டி என்பதால், இன்றையப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஸ்ரீ நர்த்தன விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்.. பக்தர்கள் சாமி தரிசனம்

திருவாரூர் மாவட்டம் ஸ்ரீ நர்த்தன விநாயகர் ஆலய  ராஜகோபுர  கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாஜகவுடன் கூட்டணியா?- விஜய்க்கு அமைச்சர் முத்துசாமி பதில்

திமுகவிற்கு பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை

மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை.. பின்னணி என்ன?

தனியார் பள்ளி ஆசிரியை 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண்கள் பெயரில் ‘சாட்டிங்’...89 லட்சத்தை சுருட்டிய 4 பேர் கைது

மேட்ரிமோனியல் எனப்படும், திருமணத்திற்கு வரன் தேடும் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக, வரன் தேடுவோரை குறி வைத்து, மர்ம கும்பல் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறது.