K U M U D A M   N E W S

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 02-10-2024

மணி தலைப்புச் செய்திகள்

தூக்கு பாலத்தை 10 மீ. உயரம் வரை தூக்கி சோதனை

ராமநாதபுரம் பாம்பன் கடல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை 10 மீ. உயரம் தூக்கி சோதனை. தூக்கம் பாலத்தை முழுமையாக மேலே தூக்கி இறக்கி ரயில்வே ஊழியர்கள் வெற்றிகரமாக சோதனை செய்தனர்

"ஆணவக்கொலை பண்ணிருவாங்க.." கதறிய காதல் ஜோடி

மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞருக்கு வில்லனாக மாறியுள்ளது அவரது குடும்பம்... குடும்பத்தினர் அளித்த தொந்தரவுகளை தாங்க முடியாத கணவர், அவரது மனைவியை குழந்தை போல தூக்கி வந்து ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர்மல்க புகாரளித்துள்ளார். என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

#BREAKING || அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

வானில் தோன்றவுள்ள ’ரிங் ஆஃப் பயர்’.. உடல்நலத்துக்கு பாதிப்புகள் ஏற்படுமா?

2024ம் ஆண்டிற்கான 2வது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 2ம் தேதி (நாளை) தோன்றவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை எங்கு காணலாம், எப்போது காணலாம், மனித உடலுக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

#BREAKING || கல்லூரி மாணவன் மீது மர்மநபர்கள் தாக்குதல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவன் மீது மர்மநபர்கள் தாக்குதல். தனியார் பேருந்தில் அமர்ந்திருந்த மாணவனை மர்மநபர்கள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு - போலீசார் விசாரணை

சோமஸ்கந்தர் உலோக சிலை மீட்பு

அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் மியூசியத்தில் இருந்த சோமஸ்கந்தர் உலோக சிலையை அதிகாரிகள் மீட்டனர்.

டிசம்பருக்கு முன்பே வந்த சோகம்.. பீதியை கிளப்பிய வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல்நலம்.. அப்பலோ மருத்துவமனை கொடுத்த அப்டேட்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளது அப்போலோ மருத்துவனை.

’இதுவர பார்த்தது ட்ரெய்லர் தான் கண்ணா..’ அதிக மழை குறித்து எச்சரிக்கும் வானிலை மையம்

அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல். இயல்பை விட 115 சதவீதம் கூடுதலாக மழை பெய்யக்கூடும் எனவும் கணிப்பு.