கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் அதிரடி கைது..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கள்ளச்சாரம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கள்ளச்சாரயம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கள்ளச்சாரம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கள்ளச்சாரயம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த 2 மாதங்களாக கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காப்பாற்று.. காப்பாற்று.. என்ற முழக்கத்தோடு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் தொடங்கிய போக்குவரத்து நெரிசல் இன்னும் சீராகாமல் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளியில் பெற்றோர் வாக்குவாதம் செய்ததை அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை அருகே அரசு பேருந்தில் ஏற முயன்ற பயணியை நடத்துநர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ராஜதானிக்கோட்டை கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனே தமிழக அரசு சிறப்பு முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற பேருந்தை நடுவழியில் கை நீட்டி அஜித் என்பவர் நிறுத்தியுள்ளார். பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றதால் ஆத்திரமடைந்த அவர், தன்னுடைய நண்பர்களுடன் வந்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மதுரை சோழவந்தான் பகுதியில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் முத்தையா என்பவருக்கும் மதன்குமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த முத்தையா மகன் விக்னேஸ்வரன் மதன்குமாரின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதையடுத்து மதன்குமார் அளித்த புகாரின்பேரில் விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திரமோகன், தனலட்சுமி ஆகியோரின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.