K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடசேமபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் மழை நீரை உடனடியாக அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா? – நீதிமன்றம் அதிரடி கேள்வி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக்கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  

சென்னையில் திடீரென உருவான ராட்சத பள்ளம்... காரணம் என்ன?

சென்னை வளசரவாக்கம் அருகே சின்ன போரூர் பகுதியில் சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

மழைநீருடன் கலந்த கழிவுநீர்... வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை வடிகால் வசதி ஏற்படுத்தாததால் குடியிருப்புக்குள் மழைநீர் தேங்குவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Cyclone Dana Update: நெருங்கும் டானா.. காத்திருக்கும் எச்சரிக்கை! தற்போதைய நிலை?

டானா புயல் நெருங்கும் நிலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் சூறைக்காற்று வீசத் தொடங்கியது

TVK Maanadu குறித்து முதன்முறையாக பேசிய விஜயின் தந்தை

TVK Maanadu குறித்து முதன்முறையாக பேசிய விஜயின் தந்தை

சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுங்க.. வருண்குமார் ஐபிஎஸ்-யிடம் புகார் அளித்த வழக்கறிஞர்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். 

தலைமைச் செயலகத்தில் அதிர்வு? - பொறியாளர்கள் விளக்கம்

சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், நுண்ணிய விரிசல் மட்டுமே ஏற்பட்டுள்ளதால் ஊழியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிக்னல் கோளாறு.. நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்

சென்னை பேசின் பிரிட்ஜ் - கொருக்குப்பேட்டை இடையே சிக்னல் கோளாறு காரணமாக நடு வழியில் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது. சுமார் 1 மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்றனர்.