K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

தவெக மாநாடு; சிறப்புக் குழுக்கள் அமைப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாட்டு பணிகளை மேற்கொள்ள 3 குழுக்களை கட்சி தலைமை அமைத்துள்ளது. 

கூல் லிப் பாக்கெட்டில் ஏன் மண்டை ஓடு படம் இல்லை - நீதிமன்றம் கேள்வி

மாணவர்கள், இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்களை முற்றிலும் தடை செய்யக்கோரிய வழக்கில், கூல் லிப் போன்ற போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்க எம்மாதிரியான வழிகாட்டுதல் வழங்கலாம் என மத்திய, குட்கா நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

ஆளுநரிடம் புகார்.. நேரடி விசிட் அடித்த அமைச்சர்..பாரதியார் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மாணவர் புகாரளித்த நிலையில், உணவு விடுத்திக்கு சென்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆய்வு மேற்கொண்டார்.

100 ஏக்கர் ஒரே நாளில் நாசம்.. வேதனையில் குமுறும் விவசாயிகள்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கனமழையால் நெல் நாற்று நட தயாராக இருந்த 100 ஏக்கர் விலை நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர். 

"வடகிழக்கு பருவமழை.. வதந்திகளை நம்ப வேண்டாம்.." - பொதுமக்களுக்கு முதலமைச்சர் அறிவுரை

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...

தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை மட்டுமே தமிழகம் இல்லை - தமிழக அரசுக்கு EPS கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரண நடவடிக்கையை எடுக்காமல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்துவதா என இபிஎஸ் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் மீது வழக்கு பதிந்து விசாரணைய தொடங்குங்க... நீதிமன்றம் அதிரடி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் பாடியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்ய போலீசாருக்கு கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிலைக்கடத்தல் வழக்கு... முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமின் நிபந்தனையில் தளர்வு

சிலைக் கடத்தல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு விதிக்கப்பட்ட முன்ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தியது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  

அக்டோபரை விட நவம்பரில் அதி கனமழை.. இப்போதே எச்சரித்த வெதர்மேன்

அக்டோபர் 16, 17ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.