K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

மதுரையில் 2 முக்கிய நுழைவு வாயில்களை இடிக்க அதிரடி உத்தரவு

மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நுழைவு வாயில் ஆகியவற்றை இடித்து அகற்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

கோலாகலமாக நடக்க உள்ள முதல் மாநாடு.. கட்சியினருக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தல்

தவெக மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டிற்கு வரும் கட்சியினர் மது அருந்திவிட்டு வரக்கூடாது. பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கட்சியினருக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்

ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற எதிர்ப்பு.. ஒன்று திரண்ட கிராம மக்கள்...

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள கவுந்தப்பாடி ஊராட்சியை பேரூட்சியாக மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்... விசாரணையை தொடங்கிய அதிகாரிகள்

நாமக்கல் பள்ளிபாளையம் அலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகாரளித்தனர். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அலுவலர், தாசில்தார் உள்ளிட்டோர் புகாரளித்த பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

Gutka Case : குட்கா வழக்கு.. குற்றப்பத்திரிகை தயார்.. CBI தரப்பில் தகவல்

Gutka Malpractice Case Charge Sheet : குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை தயாராக உள்ளதாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் CBI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு.. சி.வி.சண்முகத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்.. ஆபத்தை உணராமல் பயணிக்கும் மக்கள்

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருக்கோவிலூர் - அரகண்டநல்லூரை இணைக்கும் தரைப்பாலத்தின் ஒருபகுதி அடித்து செல்லப்பட்டது. ஆனால் ஆபத்தை உணராமல் பாலத்தின் ஓரமாக வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது

ஆஸ்கர் விருதுக்கு லாப்பட்டா லேடீஸ் பரிந்துரை

ஆஸ்கர் விருது சிறந்த வெளிநாட்டு பட பிரிவுக்கு கிரண்ராவ் இயக்கிய லாப்பட்டா லேடீஸ் இந்திய பிலிம் சேம்பர் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  தங்கலான், வாழை, மகாராஜா, ஜமா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்சல் ஆகிய படங்கள் போட்டியில் இருந்தன

"எங்களுக்கு வீடு ஒதுக்கவில்லை.."போராட்டத்தில் இறங்கிய மக்கள்..எழும்பூரில் பரபரப்பு

எழும்பூர் கண்ணப்பர் திடல் அமைச்சர் உதயநிதி மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் குடியிருப்பு ஒத்துக்கீடு செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார். இந்திய 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களுக்கு வீடு ஒதுக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்றார் அதிஷி

டெல்லியில் 8வது முதலமைச்சராக அதிஷி பொறுப்பேற்றுக்கொண்டார். டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 26,27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது