K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. இயக்குநர் அமீர் தலையில் விழுந்த இடி

ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்பட 12 பேர் மீது 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை  தாக்கல் செய்துள்ளது 

NLC தொழிலாளர்கள் போராட்டத்தில் தள்ளுமுள்ளு...

நெய்வேலி கியூ பாலத்தில் இருந்து சுரங்க நிர்வாக அலுவலகத்திற்கு பேரணி சென்று தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது 

வெளியானது வேட்டையன் படத்தின் புதிய அப்டேட்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்து வருகின்றது. முன்னதாக ரித்திகா சிங், துஷாரா விஜயன் கதாபாத்திரத்தின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ராணா டகுபதி நட்ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது

GOAT Movie Box Office Collection : வசூலை வாரி குவித்த கோட்... இத்தனை கோடி வசூலா..?

GOAT Movie Box Office Collection : விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான GOAT திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.413 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Shawarma Death : மீண்டும் உயிரை காவு வாங்கிய ஷவர்மா..? இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..

Shawarma Death in Chennai : சென்னை - மதுரவாயல் அருகே ஹோட்டலில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண் ஷவர்மா சாப்பிட்டதால்தான் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Nipah Virus Alert : மிரட்டும் நிபா வைரஸ்.. தமிழ்நாட்டுக்கு ஆபத்தா..?

Nipah Virus Alert : தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை சார்பில் தமிழக-கேரள எல்லையான தேனி பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. 

திருவள்ளுவர் பிறந்த தினம்... அரசுக்கு உத்தரவிட முடியாது.. மறுத்த சென்னை உயர்நீதிமன்றம்

திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை; அதனால் அன்றைய தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம் - ICU-வில் மகன்.. கலங்கி நிற்கும் பெற்றோர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சந்தியூர் பகுதியில் தெருநாய் கடித்து சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.