செந்தில் பாலாஜி தியாகியா..? - தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி
எதிர்க்கட்சியில் இருக்கும்போது துரோகி, திமுகவுக்கு வந்தவுடன் செந்தில் பாலாஜி தியாகியா என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சியில் இருக்கும்போது துரோகி, திமுகவுக்கு வந்தவுடன் செந்தில் பாலாஜி தியாகியா என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று மாலை அல்லது நாளை புழல் சிறையில் இருந்து வெளியே வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரை வரவேற்கும் விதமாக புழல் சிறை வாசலில் திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
செந்தில் பாலாஜி சாட்சிகளை தொடர்பு கொண்டால் ஜாமின் ரத்து செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், விதிமுறைகளை மீறியதாக அனுமதி மறுக்கப்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆனந்த் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே செங்கீரை ஊராட்சி எல்லை தொடர்பாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளுடன் உடன்பாடு எட்டப்படாததையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்ப கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை முறையாக பராமரிப்பது இல்லை. அந்த துறை வசூல் ராஜா எம்பிபிஎஸ் பணிகளை மட்டுமே செய்கிறது என்று மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சேலம் கிச்சிபாளையம் சேர்ந்தவர் ஜான். இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இன்று நான்கு வழக்குகளிலும் விசாரணைக்காக தனது மனைவி சரண்யாவுடன் சேலம் நீதிமன்றம் வந்தார். விசாரணை முடிந்து காரில் ஏறி செல்ல முயன்ற அவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்தனர்
மறைந்த பேராயர் எஸ்ரா சற்குணத்தின் மகளுக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.