K U M U D A M   N E W S
Advertisement

வீடியோ ஸ்டோரி

பெண்கள் பாதுகாப்பு.. திமுக அரசை கடுமையாக சாடிய இபிஎஸ்

தஞ்சை பூதலூரில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்கள் நடமாடவே முடியாது அளவுக்கு பாதுகாப்பு கொஞ்சமும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார் 

முதலமைச்சர் முன்னிலையில் 3 முக்கிய நிறுவனங்களுடன் ரூ.850 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது

நில மோசடி வழக்கு.. சிபிஐ அதிகாரிகள் சோதனை

நீலாங்கரை நிலமோசடி வழக்கு தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாநகரில் காவல் ஆய்வாளர் ஆனந்தபாபு வீடு மற்றும் சாஸ்திரி நகர், பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், வேளச்சேரியிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. 

பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்... எமனாக மாறிய பெற்றோர்கள்

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் பெற்றோர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் - பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு

சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் 2 அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார் 

விஜய்யின் தவெக மாநாடுக்கு அனுமதி கிடைக்குமா..?

மாநாடு நடத்துவது தொடர்பாக தவெகவினருக்கு போலீசார் எழுப்பிய 21 கேள்விகளுக்கு இன்று அக்கட்சி சார்பில் பதிலளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிற்போக்கு கருத்துகளை கேள்வி கேளுங்கள் - மேடையில் விளாசிய அன்பில் மகேஷ்

கல்வியே சமத்துவ மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் எனும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். 

அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம்... அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி

சென்னையில் அரசுப்பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணு, ஆசிரியரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்  

சவாரியை ரத்து செய்ததால் ஆத்திரம்.. பெண்ணை தாக்கிய ஓட்டுநர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சவாரியை ரத்து செய்த பெண்ணை, ஓலா ஆட்டோ ஓட்டுனர் கண்ணத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.