K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் கைது..

நாகை, மயிலாடுதுறையை சேர்ந்த 37 மீனவர்களை நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படைனர் கைது செய்தனர். 

கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு... பதில்தர அரசுக்கு ஆணை

சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு, மாநில மனித உரிமை ஆணையம், சிறைத் துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

விஷவாயு தாக்கி இருவர் பலி.. சிவகங்கை அருகே நடந்த சோகம்

சிவகங்கை இளையான்குடியில் கழிவு நீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி இருவர் பலியாகினர். அச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆம்னி பேருந்தில் ரூ.2.15 கோடி பறிமுதல்

ஹைதராபாத்தில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு - ஆந்திரா எல்லையான எளாவூர் சோதனை சாவடியில் பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் அனுப்பப்பட்டிருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.2.15 கோடி பணம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னையை சேர்ந்த சூரஜ் பூரி என்பவரிடம் IT அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tirupati Laddu Issue : லட்டு நெய் வாகனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

Tirupati Laddu Issue : திருப்பதி கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் நந்தினி நெய் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி, மின்சார பூட்டுகளை பயன்படுத்த கர்நாடகா பால் கூட்டமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LIVE : Delhi CM Atishi Marlena Oath Ceremony : டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி

LIVE : Delhi CM Atishi Marlena Oath Ceremony Live Update in Tamil : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதல்வராக அதிஷி பதவியேற்றார். இவருக்கு துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

13 வயது மாணவியிடம் சில்மிஷம்.. முதியவரின் கொடூர செயல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 13 வயது பள்ளி மாணவி சின்னகண்ணு என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சின்னகண்ணு கைது செய்யப்பட்டார்.

ரவுடி மீது துப்பாக்கிச்சூடு.. கோவை ஆணையர் விளக்கம்

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

லட்டு விவகாரம்... திருப்பதி தேவஸ்தானம் அவசர ஆலோசனை

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தேவஸ்தான முக்கிய நிர்வாகிகள், செயல் அதிகாரி உள்ளிட்டோருக்கு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது.

#BREAKING கொடைக்கானல் அருகே நிலத்தில் திடீர் விரிசல்... மக்கள் பீதி

கொடைக்கானல் அருகே கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் 300 அடி நீளத்திற்கு நிலம் தனியாக பிளந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். கடந்த சில நாட்களாக குழாயில் நீர் வராததால், சென்று பார்த்தபோது பூமி விரிசல் விட்டிருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். 

Madurai : பவுடர் பால் குடித்த குழந்தை உயிரிழப்பு - மதுரையில் நேர்ந்த சோகம்

Madurai Child Death : மதுரையில் பால் பவுடர் குடித்த 2 மாத குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Northeast Monsoon : நெருங்கும் வடகிழக்கு பருவமழை... ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

Northeast Monsoon : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தினார் 

Siruvani River Dam : கேரள அரசின் விண்ணப்பத்தை மத்திய அரசு ஏற்க மறுப்பு

Siruvani River Dam : சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முயற்சித்து வந்த நிலையில் கேரள அரசின் சுற்றுச் சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தை மத்திய சுற்றுச் சூழல் துறை திருப்பி அனுப்பியது. 

Ponneri Railway Station : திருவள்ளூரில் ரயிலை கவிழ்க்க சதி..?

Ponneri Railway Station : திருவள்ளூர் பொன்னேரியில் தண்டவாளத்தில் உள்ள ரயில்வே சிக்னல் பெட்டியின் போல்டுகள் கழற்றப்பட்டதால் ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

LIVE: Kamal Haasan Speech : ம.நீ.ம. பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

Kamal Haasan Speech at Makkal Needhi Maiam General Meeting : மக்கள் நீதி மய்ய கட்சி பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் உரையாற்றி வருகிறார்

Makkal Needhi Maiam : ம.நீ.ம. பொதுக்குழு கூட்டம்.. நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் என்னென்ன..?

Makkal Needhi Maiam General Meeting Resolution : மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘வாழு, வாழ விடு...’ - விவாகரத்து தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி விளக்கம்

தனிப்பட்ட விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம். யாருடைய பெயரையும்| இழுக்க வேண்டாம்; வாழு, வாழ விடு என விவாகரத்து குறித்த கேள்விக்கு நடிகர் ஜெயம் ரவி பதிலளித்துள்ளார். 

மாஞ்சோலை விவகாரம்.. மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை

மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக 3 நாட்களாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பிபிடிசி நிர்வாகத்திடம் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் விசாரணை நடத்திய நிலையில் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பள்ளிக்கல்வித்துறை திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம்? பாஜக நிர்வாகிகள் மீது புகார்

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து பழனியில் பஞ்சாமிர்தம் ஆவின் நெய்யில் தான் தயாரிக்கப்படுவதாக அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் என்பவர் மீது பழநி கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பாடகர் மனோ மகன்களுக்கு முன்ஜாமின்..

இரு தரப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரை தாக்கியதாக பாடகர் மனோவின் மகன்கள் ஜாகிர், ரபீக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவரும் 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.  

ம.நீ.ம. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

சென்னை வேளச்சேரி அதிமுக பகுதி செயலாளர் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான மாம்பலம், திருவல்லிக்கேணி,கோவை ஆகிய ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பதி லட்டு தயாரிக்க அனுப்பிய நெய் கலப்படமா.. ? - ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் சோதனை

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.55,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.98.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது