K U M U D A M   N E W S
Promotional Banner

வீடியோ ஸ்டோரி

Castewise Census in India: சாதிவாரி கணக்கெடுப்பு - யாருக்கு அதிகாரம்? | Union Government Statement

Caste wise Census in India:சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என ஆந்திரா அரசு RTI மூலம் தகவல் தெரிவித்ததால் தமிழ்நாடு அரசுமீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Actor Jayam Ravi Divorce Aarti : இனிமே என்னால வாழ முடியாது.. ஜெயம் ரவி எடுத்த அதிரடி முடிவு

JayamRavi Divorce: தனது மனைவியை விவாகரத்து செய்தது குறித்து நடிகர் ஜெயம்ரவி அறிவித்துள்ளார்.

"ஸ்டேட் போர்டு பாடத்திட்டம்" - ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி!

Anbil Mahesh respond to RNRavi: மாநில பாடத்திட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலையை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலையை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

#BREAKING கிண்டி ரேஸ் கோர்ஸ்க்கு சீல்... நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு

780 கோடி ரூபாய் வரி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது

த.வெ.க.வில் இணையும் அதிமுக முக்கியப்புள்ளி?.. இபிஎஸ் கொடுத்த பதில்

அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரன் விஜய்யின் தவெக கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ளார் 

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு.. CBI-க்கு அவகாசம்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க சிபிஐ-க்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம் 

சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து.. அதிகாரபூர்வமாக வெளிவந்த அறிவிப்பு

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

#JUSTIN: அரசு பள்ளியில் மர்ம நபர்கள் அட்டகாசம்.. மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி

வார விடுமுறை நாட்களில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்

#JUSTIN : வேலூரில் ரயில் சேவை பாதிப்பு.. அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

வேலூர் ரயில்வே கேட் அருகே மின் வயர் அறுந்ததால் திருச்சியில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் நிறுத்தப்பட்டது. மின் வயர் சரி செய்யும் பணிக்காக சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நின்றதால் ரயில்வே அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்

#breaking: மீனவர்களை மீட்க கோரி முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கை வரும் 23ம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்

சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சுமார் ரூ.780 கோடி குத்தகை பாக்கி வைத்திருப்பதால் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்து வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மகாவிஷ்ணு விவகாரம் - விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு நடத்திய ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளின் நிலவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விரைவில் அவர் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இபிஎஸ் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - தமிழக அரசு

தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 1,331 விடுதிகளில் 98,909 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். ஆதிதிராவிடர் மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற சூழல் இருக்கும் நிலையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை ஆதாரமற்றது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.  

தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தேசிய கல்விக்கொள்கையை மறுப்பதால் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மகாவிஷ்ணுவின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்

அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு பேசிய வீடியோ பரம்பொருள் பவுண்டேஷன் என்ற யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

Kollidam river, death due to drowning in river, Thanjavur, Thirukkatupalli, கொள்ளிடம் ஆறு, ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு, தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி,

பாராலிம்பிக்ஸில் புதிய வரலாறு.. 29 பதக்கங்களுடன் நிறைவு செய்த இந்தியா

பாராலிம்பிக்ஸ் விளையாட்டு திருவிழா ஆடல் பாடல் என கோலாகலமாக நிறைவு பெற்றது.

மகா விஷ்ணுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - H.ராஜா

ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை முதலில் விடுதலை செய்யவேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருக்குறளை சுட்டிக்காட்டி ஒழுக்கம் பற்றி பேசியதால் தான், ஒழுக்கமற்ற திமுகவினர் ஆவேசம் அடைந்து அவரை தீவிரவாதி போல் கைது செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார். 

"69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து.. அது ரத்து செய்யப்பட்டால் அன்றே திமுக ஆட்சி கலைந்துவிடும்"

69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து.. அது ரத்து செய்யப்பட்டால் அன்றே திமுக ஆட்சி கலைந்துவிடும் என கூறியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

விநாயகர் சதுர்த்தி கோலாகலம் - மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று சிலைகள் கரைப்பு

ராமநாதபுரம் பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் - மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று சிலைகள் கரைத்த பக்தர்கள்

"நடிகர் சங்க கடனை அடைக்க Rajini Sir கொடுத்த ஐடியா"

நடிகர் சங்க கடனை அடைக்க நடிகர் ரஜினி கொடுத்த ஐடியா பற்றி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார் நடிகர் கார்த்தி

பாலியல் புகார்கள் குறித்து மீடியாவில் பேச வேண்டாம் - நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி

பாலியல் புகார்கள் குறித்து மீடியாவில் பேச வேண்டாம் என நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி தெரிவித்துள்ளார்