K U M U D A M   N E W S

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடை..? நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு, கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

4 பல்கலை. மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

குரூப் 1 தேர்வில் தமிழ்வழி கல்வியில் பயின்றதாக போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் அண்ணாமலை பல்கலை., உள்பட 4 பல்கலைக் கழகங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார்.

சின்ன விஷயத்திற்கு வழக்கு போடுறீங்க.. உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை என்ன?.. நீதிபதிகள் காட்டம்

சிறிய குற்றங்களுக்காக, கடைநிலை ஊழியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலையில், உயர் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

#JUSTIN || தீட்சிதர் சஸ்பெண்ட்; சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

"சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் அறநிலையத்துறை எப்படி தலையிட முடியும்?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சவுக்கு சங்கர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

ஜாமின் நிபந்தனைகளைத் தளர்த்தக்கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தவறாமல் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுவா திமுகவின் புதிய சமூகநீதி? ராமதாஸ் சரமாரி கேள்வி!

பணி நிலைப்புக் கோருவதால் தற்காலிகப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கூடாதாம்: இதுவா திமுகவின் புதிய சமூகநீதி? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

உணவின் தரம் குறித்து புகார்... தனிமை சிறையில் அடைக்கப்பட்ட கைதி..? நீதிமன்றம் அதிரடி உததர்வு

புழல் சிறையில் உணவின் தரம் குறித்து புகார் அளித்ததற்காக விசாரணை கைதி தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து சிறை நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்கள் அல்ல - நீதிபதி ஆவேசம்

சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது. மன கஷ்டங்களுக்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவமானப்படுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. அஞ்சலை மீதான குண்டர் சட்டம்.. காவல்துறை பதிலளிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை-யை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“கடவுளை விட மேலானவர்கள் என நினைக்கக் கூடாது..” கோயில் தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் அட்வைஸ்

சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள், கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.