K U M U D A M   N E W S
Promotional Banner

உயிரிழப்பு

காசா: உணவுக்காகக் காத்திருந்தோர் மீது இஸ்ரேல் தாக்குதல்.. 2 பேர் பலி, 70 பேர் காயம்!

காசாவில் உணவுக்காகக் காத்திருந்தோர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததோடு, 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதிலிருந்து, காசாவில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானம் பாதுகாப்பற்றது - மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை!

“பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மக்கள் அதிகளவில் கூடக்கூடிய, பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவது பாதுகாப்பற்றது என்று மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழப்பு!

பீகாரில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

பாராக்ளைடிங் விபத்து: 'Fearless Felix' ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் மறைவு!

இத்தாலியில் சாகசம் செய்தபோது கட்டுப்பாட்டை இழந்து நீச்சல்குளம் அருகே விழுந்து, ஆஸ்திரியாவைச் சேர்ந்த பாராக்ளைடிங் வீரர் ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அலட்சியத்தில் சுகாதாரத் துறை.. நிபா வைரஸ் பரவும் அபாயம்.. அச்சத்தில் கோவை மக்கள்!

கேரள மாநிலம், பாலக்காடு மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டு உள்ளதால், கேரள மாநிலம் முழுவதும் உஷார்ப்படுத்தப்பட்டு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

திருவண்ணாமலையில் பாலத்தில் கார் மோதி பயங்கர விபத்து: ஒருவர் பலி…3 பேர் படுகாயம்

பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்டெர்லாக் செய்யப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது விபத்து - ரயில்வே நிர்வாகம்

பள்ளி வேன் மீது, சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளானதில், 2 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், வேன் ஓட்டுநர் தான் விபத்துக்கு காரணம் என்றும், வேகமாக இயக்கியதாகவும், ரயில்வே தண்டவாளத்திற்குள் நுழைந்ததாகவும் ரயில்வே தரப்பில் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகிவுள்ளது.

பட்டாசு ஆலை வெடி விபத்து... ஒருவர் உயிரிழப்பு.. 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவில் அதிக உப்பு.. கணவன் தாக்கியதில் கர்ப்பிணி மனைவி தவறி விழுந்து உயிரிழப்பு!

உணவில்அதிக உப்பு சேர்த்ததாக மனைவியை கடுமையாக தாக்கிய கணவரால் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து 5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்தில் பெண் எஸ்எஸ்ஐ உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை..!

ராசிபுரம் அருகே பெண் எஸ்.எஸ்.ஐ காவல் நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்து.. 5 பேர் உயிரிழப்பு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒரு பெண் தொழிலாளி உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு நேர்ந்த சோகம்- கர்நாடகாவில் பரபரப்பு

4 பேரும் மாகடி தாலுகாவில் உள்ள மட்டிகெரே கிராமத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.. 6 காவலர்கள் பணியிடை நீக்கம்!

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கடை அடைப்பு உள்ளிட்ட அடுத்த சம்பவங்களால் மடப்புரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஒடிசா பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை: நெரிசலில் 3 பேர் பலி-50 பேர் படுகாயம்

பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

காசாவில் பயங்கர தாக்குதல்: ஒரே நாளில் 79 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேல் நடத்திய கடும் விமான தாக்குதலில் வெறும் ஒரு நாளிலேயே 79 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை 56,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுமண தம்பதிக்கு நடந்த பெரும் சோகம்...திருச்சியில் பயங்கரம்

வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய புதுமண தம்பதியின் கார் விபத்தில் சிக்கிய மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கால் டாக்ஸி விபத்து: தந்தை, கர்ப்பிணி உயிரிழப்பு-மதுபோதையால் நடந்த சோகம்

சென்னையில் கால் டாக்ஸி விபத்தில் தந்தை மற்றும் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழப்பு. தாய் மற்றும் கார் ஓட்டுநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

உக்ரைன் குடியிருப்புப் பகுதியில் ரஷ்யா தாக்குதல்.. 14 பேர் உயிரிழப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியதில், உக்ரனை சேர்ந்த 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். உக்ரைன் தலைநகர் கீவ்-ல் வானுயர கட்டடத்தின் மீது இரவு நேரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 44-க்கும் மேற்பட்டோர் காயம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே 7 வது நாளாக தொடரும் மோதல்.. இரு நாடுகளிலும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இஸ்ரேல் - ஈரான் இடையே 7 ஆவது நாளாக தொடரும் மோதலால் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 585 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்து 326 பேர் காயமடைந்துள்ளனர்.

வாகன விபத்து: சிறுமி மீது ஏறி இறங்கிய லாரி.. தாய் கண்முன்னே உயிரிழந்த மகள்!

தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுமி மீது, தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேய பரிதாமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் படப்பிடிப்பில் நடந்த சோகம்.. நடிகர் உயிரிழப்பு

இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், துணை நடிகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குட் பேட் அக்லி திரைப்பட நடிகரின் தந்தை கார் விபத்தில் உயிரிழப்பு!

விஜய் மற்றும் அஜித்குமார் ஆகியோருடன் நடித்து பிரபலமடைந்த பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ குடும்பத்துடன் பெங்களூருவுக்குச் சென்று கொண்டிருந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் கேரள நடிகர் சைன் தாம் சாக்கோஸ் என்பவரின் சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொரோனாவினால் தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை - அமைச்சர் சுப்ரமணியன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், இணை நோய் பாதிப்பு இருப்பதாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சீர்மிகு சிறுநீரக மருந்து திட்டத்தில் மக்கள் பயன் பெற நகரத்திலும் டயாலிசஸ் செய்யும் வசதியை கொண்டு செல்ல இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.

பெருவெள்ளத்தில் மூழ்கிய நைஜீரிய நகரம்... 88 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் கடும் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 88 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், மற்றும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.