தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.87,600-க்கு விற்பனை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 1, 2025) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 1, 2025) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடாத ஹர்திக் பாண்ட்யா, குவாட்ரைசெப்ஸ் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகலாம் எனத் தெரிகிறது. அவர் முழுமையாகக் குணமடைந்தால் மட்டுமே 2026 டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 7 நாள் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார். இன்று ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபொழுது ஆட்சிக்கு வந்தால் நாங்கள் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் முதலமைச்சர் எனக் கூறிய முதலமைச்சர் தான் ஆசிரியர்களின் முதல் எதிரி என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகளிர் ODI உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5ஆம் தேதி இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இத்தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.
கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரூ.10,000 அபராதமும், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ரூ. 50 லட்சம் சொத்து, 46 லட்சம் வங்கி கணக்குகளை முடக்கி காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுத்ததை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.