K U M U D A M   N E W S

கனமழை

மழைநீருடன் கலந்த கழிவுநீர்... வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை வடிகால் வசதி ஏற்படுத்தாததால் குடியிருப்புக்குள் மழைநீர் தேங்குவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... பாத்து சூதானமா இருங்கப்பா....

தமிழ்நாட்டில் இன்று (அக். 22) 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தரைப்படத்தை மூழ்கடித்த ரசாயன நுரை... போக்குவரத்து பாதிப்பு

கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றுக்கு திறகப்பட்ட உபரி நீரில் அதிக அளவில் நுரை பொங்கியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குமுதம் செய்தி எதிரொலி; மதுரையில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றம்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக மதுரையின் செல்லூர் உள்ளிட்ட பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பது தொடர்பாக குமுதம் செய்திகளில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்றினர்.

திருப்பத்தூரில் வெளுத்து வாங்கும் கனமழை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை. விண்ணமங்கலம், அய்யனூர், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

இடைவிடாமல் கொட்டிய மழை... சாலைகளில் பெருக்கெடுக்கும் மழைநீர்

நாகர்கோவிலில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

Dana Puyal Update : தீவிர புயலாக உருவெடுக்கும் ”டானா”பாதிப்பு யாருக்கு?

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

14 மாவட்டங்களுக்கு கனமழை.. எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருக்கு..கனமழை இருக்கு.. - எச்சரிக்கும் வனிலை மையம்..எதிர்கொள்ள தயாரா இருங்க மக்களே!

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

சீட்டு கட்டுப்போல் சரிந்த கட்டிடம்.. 15 மணி நேரமாக போராடும் வீரர்கள் - மீட்பதில் சிக்கல்..?

தொடர் கனமழையால் பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த 6 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கட்டடம்  சட்ட விரோதமாக கட்டப்பட்டு வந்ததாகவும், கட்டட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.