தடையை மீறி பேரணி.. கிருஷ்ணசாமி மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை
தடையை மீறி பேரணி செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்பட 686 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தடையை மீறி பேரணி செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்பட 686 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அருந்ததி உள் இடஒதுக்கீடு அரசாணை ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் ரக்ஷிதா என்பவர் வீட்டில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 5 பேர் மீட்கப்பட்டனர். மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஜெ.ஜெ.நகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, 100 எல்எஸ்டி ஸ்டாம்புகள், வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை வேளச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரை கார் ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர். தொழில் போட்டி காரணாமாக கொல்ல சதி செய்ததாக கைதான சிவகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மீஞ்சூரில் சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண்ணின் சடலம் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிவகங்கை அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாட்டாகுடி கிராமத்தை சேர்ந்த குண்டுமணியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கள்ளச்சாரம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கள்ளச்சாரயம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டில் பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய 4 பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரையில் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.