K U M U D A M   N E W S

‘போராட்டத்தில் ஈடுபடக் கூடாது’ - என்.எல்.சி. தொழிலாளர்கள் சங்கத்துக்கு உத்தரவு

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதை எதிர்த்து என் எல் சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை குழுவை அணுக சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் அதுவரை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

திடீரென வெடித்த டயர்.. 25 பேர் நிலை? காஞ்சிபுரத்தில் பயங்கரம்

காஞ்சிபுரம் கூத்திரமேடு பகுதியில் டாடா ஏஸ் வாகனத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வீட்டு வேலை செய்த சிறுமி உயிரிழந்த விவகாரம்... போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை அமைந்தகரையில் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை அறிகுறி..

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்டதால் அவர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

உடலில் ரத்தக் காயங்கள்.. பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமி.. வீட்டு உரிமையாளர் கைது

16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் முகமது நவாஸ், அவரது மனைவி உட்பட 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கை கோர்க்கும் Vijay - Thiruma ? - அரசியல் களமே ஆடிப்போக வந்த தகவல்

சென்னையில் டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய், விசிக தலைவர் திருமாவளவன் இருவரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

“நல்ல படத்தை மக்கள் கொண்டாடுவார்கள் எனும் எனது நம்பிக்கை உறுதியாகியுள்ளது” - கமல் நெகிழ்ச்சி!

திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

"கடவுளே அஜித்தே.." Vijay-க்கு அரசியல் Tips கொடுத்த Ajith.. தல, தளபதியின் ரகசிய உரையாடல்

தவெக மாநாட்டை நடத்தியுள்ள விஜய்க்கு நடிகர் அஜித் சில அட்வைஸ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைகை ஆற்றில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்க வேண்டும் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

குடி நீருக்கு பயன்டும் வைகை ஆற்று நீரை மாசு படாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.