K U M U D A M   N E W S

விஷவாயு தாக்கி இருவர் பலி.. சிவகங்கை அருகே நடந்த சோகம்

சிவகங்கை இளையான்குடியில் கழிவு நீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி இருவர் பலியாகினர். அச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காக்கா-கழுகு கதை இல்ல.. 'வேட்டையன்' விழாவில் ரஜினி சொன்ன குட்டி ஸ்டோரி என்ன?

Rajinikanth Speech at Vettaiyan Audio Launch : ''தளபதி மாதிரி என்னை நடிக்க சொன்னா எப்படி? இதனால், தான் பைரவி, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை ஆகிய படங்களில் நடித்து என்னுடைய டிராக்கை மாற்றிக்கொண்டேன்'' என்று ரஜினி தெரிவித்துள்ளார்

உள்ளாட்சிக்கும் ஒரே தேர்தல் நடத்தப்படுமா? - சீமான்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் உள்ளாட்சிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமா என்று சீமான் கேள்வி

மனோ மகன்களுக்கு தர்ம அடி... அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்... குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு!

தன் மகன்கள் மீதும், தன் மீதும் 10 க்கும் மேற்பட்டோர்கள் தாக்குதல் நடத்தியதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

உதயநிதி துணை முதலமைச்சராவார்... அடித்து சொன்ன அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கலைஞர் எப்படி ஸ்டாலினை உருவாக்கினாரோ அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக உதயநிதியை துணை முதலமைச்சராக உருவாக்குவார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

வீட்டு வேலைக்கு ஆயுள் தண்டனை கைதி... விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்

ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய வழக்கில் 4 காவலர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவக்குமார் குற்றத்தை ஒப்புக்கொள்ளாததால் அவரை போலீசார் தாக்கி வந்தது விசாரணையில் அம்பலமானது.

"உதயநிதிஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி"-அமைச்சர் செஞ்சி மஸ்தான்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் பதவியை வழங்குவார் - கோவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

'ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு'.. பகுஜன் சமாஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!

''காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகிப்பதால், செல்வபெருந்தகையை கைது செய்வதில் ஆளும் கட்சியான திமுகவும், காவல் துறையினரும் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆகவே செல்வபெருந்தகையை காங்கிரசில் இருந்து நீக்க வேண்டும்'' என்று கடிதத்தில் கூறப்படுள்ளது.

BiggBoss: பிக் பாஸ் வீட்டில் என்ட்ரியாகும் ‘கவுண்டம்பாளையம்’ ரஞ்சித்..? பஞ்சாயத்து கன்ஃபார்ம்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளது உறுதியாகிவிட்டது. இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து இதுவரை அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்நிலையில், சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் ரஞ்சித் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய் கையால் குழந்தைகளுக்கு விஷம்... தென்காசியில் நடந்த பயங்கரம்..

தென்காசி ஆழ்வார்குறிச்சி அருகே அரளி விதையை சாப்பிட்டு 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதில் ஒரு சிறுவன் பலியான நிலையில் தாய் மற்றும் 2 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.