K U M U D A M   N E W S

ஐசரி கே கணேஷ் வீட்டு திருமணத்தில் 1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு!

ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோருக்கு என 1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கி ஐசரி கே கணேஷ் அசத்தியுள்ளார்.

IPL2025: மீண்டும் தொடங்கப்படும் ஐபிஎல் போட்டிகள்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தால் நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், தற்போடு, மே 15 ஆம் தேதிக்கு பிறகு போட்டி தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியாகியுள்ளது.

சித்ரா பௌர்ணமி: 5 மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பா.ம.க. சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு- ஏற்பாடுகள் தீவிரம்!

மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் பாமக சித்திரை முழு நிலவு மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இம்மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இணைந்து பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

13வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. சிறுமியின் தாய் உட்பட 13 பேர் கைது!

பல்லாவரம் அருகே 13-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள் மற்றும் சிறுமியின் தாய் உட்பட 13 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

ஆப்ரேஷன் சிந்தூர்: கடும் சரிவில் பாகிஸ்தான் பங்குச்சந்தைகள்!

பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் தாகுதலால், பங்குச்சந்தையில் 82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கவிஞர் வைரமுத்துவின் தாயார் காலமானார்…திரையுலகினர் இரங்கல்

இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும் என வைரமுத்து பதிவு

“என் ஒரு மாத சம்பளத்தை தேசத்துக்காக வழங்குகிறேன்” –இளையராஜா அதிரடி

சுயநலமற்ற வீர நெஞ்சங்கள் எதிரிகளை வீழ்த்துவார்கள் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என இளையராஜா பதிவு

நெல்லை நூலகத்திற்கு ‘காயிதே மில்லத்’ பெயர்...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருநெல்வேலியில் அமைய உள்ள நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“இபிஎஸ் கூறுவது நம்பத்தகுந்தது அல்ல” – சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்சினைகளை மத்திய அரசிடம், அமைச்சர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியது கிடையாது என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் சாடல்