K U M U D A M   N E W S

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

விஜய்க்குத் தலைமைப் பண்பு இல்லை; மக்களைக் கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறினார் - நீதிபதிகள் காட்டம்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கரூர் உயிரிழப்புக்கு விஜய்யே பொறுப்பு; அவர் ரஜினிகாந்த் போல அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் - எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டு!

"விஜய் எம்ஜிஆராக முடியாது; அரசியலில் பக்குவம் இல்லை" அவர் ரஜினிகாந்த் போல அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் என்று எஸ்.வி. சேகர் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் தகராறு: வடகலை பிரிவினரை கோவில் E.O. தாக்கியதாகப் புகார்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், தீர்த்தம் மற்றும் சடாரி வழங்குவதில் ஏற்பட்ட மோதலின்போது, கோவில் நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி, வடகலை பிரிவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ரமேஷைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம்!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கரூர் விவகாரம்: விஜய் தவறு செய்திருந்தால் நடவடிக்கை உறுதி - சபாநாயகர் அப்பாவு கடுமையான விமர்சனம்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்யின் காலதாமதமே விபத்துக்குக் காரணம் என்று சபாநாயகர் அப்பாவு காட்டமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் எச்சரித்தார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெறிச்செயல்: ரவுடியுடன் சேர்ந்து மனைவியை கத்தியால் வெட்ட முயன்ற கணவன் கைது!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கணவன் தினகரன், பிரபல ரவுடி 'காக்கா தீனா' மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி துர்காவைத் தாக்கிக் கத்தியால் வெட்ட முயன்ற வழக்கில், சிஎம்பிடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

ரோகிணி திரையரங்கில் நடந்த சலசலப்பு.. யூடியூபருக்குக் கொலை மிரட்டல் விடுத்த தவெக தொண்டர் கைது!

ரோஹிணி திரையரங்கில், கரூர் விபத்து குறித்துப் பேசிய யூடியூப்பருக்குக் கொலை மிரட்டல் விடுத்த தவெக தொண்டரான கோகுல் என்பவரைச் சிஎம்பிடி போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் பரபரப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின், நடிகை த்ரிஷா உட்படப் பலரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், கிண்டி ஆளுநர் மாளிகை, நடிகை த்ரிஷா மற்றும் எஸ்.வி. சேகர் ஆகியோரின் வீடுகளுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

விஜய்க்கு எதிராகப் போஸ்டர் ஒட்டிய இளைஞர் தற்கொலை: த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தன்னை மிரட்டிய திவாகர் உள்ளிட்ட 4 தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.