K U M U D A M   N E W S

கருப்புப் பட்டியலில் 40 மருந்துகள்.. 3 நிறுவனங்கள்: TNMSC அதிரடி நடவடிக்கை!

தமிழக மருத்துவ பணிகள் கழகம் (TNMSC) தரமற்ற மருந்துகள் என 40 மருந்துகளையும், 3 மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் கருப்புப் பட்டியலில் சேர்த்து உத்தரவிட்டுள்ள சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை முதல் கிட்னி திருட்டு வரை .. எல்லா குற்றத்திலும் திமுகவிற்கு பங்கு: தமிழிசை பேட்டி!

தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கிட்னி திருட்டு அனைத்திலும் திமுகவினருக்கு பங்கு இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

தூத்துக்குடியின் அடையாளமாகத் திகழும் பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா இன்று கோலாகலமாகத் துவங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வரும் நிலையில், 452 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இன்றிரவு திறந்து வைக்கிறார். பிரதமரின் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானம் பாதுகாப்பற்றது - மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை!

“பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மக்கள் அதிகளவில் கூடக்கூடிய, பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவது பாதுகாப்பற்றது என்று மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுந்தர் பிச்சை நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடி – ப்ளூம்பெர்க் தகவல்!

கூகுள் CEO சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடியை தாண்டியதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு தொடக்கத்தில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பங்குகள் உயரத் தொடங்கி தற்போது 120% உயர்வை சந்தித்துள்ளதால், சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பில் இந்த ஏற்றம் என கூறப்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

இந்திய பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையே முக்கியத்துவம் வாய்ந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தானது.

மல்லை சத்யா மீது அவதூறு வழக்கு – மதிமுக வழக்கறிஞர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார்!

மதிமுக கட்சி, கட்சி தலைவர், கட்சி கொடி ஆகியவற்றிற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது மதிமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

ரூ.35 லட்சம் நில விவகாரம்.. மன்சூர் அலிகான் மகன் தகராறு.. போலீசார் விசாரணை!

நடிகர் மன்சூர் அலிகான் நிலத்திற்காக்நிலம் வாங்குவதற்காக ரூ. 35 லட்சத்தை வாங்கி விட்டு இடத்தை தரவில்லை இடத்தின் உரிமையாளரிடம் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் உள்ளிட்டோர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்திற்கு வந்து விளக்கம் அளித்த நிலையில், நீதிமன்றம் மூலம் தீர்த்து கொள்ளும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

"அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்தை தடுத்து நிறுத்துங்க" - பாமக நிறுவனர் ராமதாஸ் டிஜிபியிடம் மனு

தனது அனுமதியின்றி கட்சியின் கொடி, சின்னம் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு போன்றவற்றை அன்புமணி பயன்படுத்தக்கூடாது என்று தமிழக டிஜிபியிடம் மனு ராமதாஸ் தரப்பில் மனு