K U M U D A M   N E W S

சர்ச்சை பேச்சு: அமைச்சர்கள் உள்நோக்கத்தோடு பேசுவதில்லை...அமைச்சர் ரகுபதி விளக்கம்

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்குவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

2026 தேர்தலில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்- செல்லூர் ராஜு

தேர்தலுக்கு முன்பாக கூட கூட்டணி அமையும், அதெல்லாம் தேர்தல் வியூகம் என்றும், 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்றும் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குக..வானதி சீனிவாசன்

பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், கட்சிப் பதவியில் இருந்து மட்டும் நீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது

பொன்முடி வெளியே.. திருச்சி சிவா உள்ளே.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை

திமுகவின் கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த திருச்சி சிவா, இன்று முதல் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதாக திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடியின் ஆபாச சர்ச்சை பேச்சு எதிரொலி- கட்சிப்பதவியில் இருந்து நீக்கிய திமுக

அமைச்சர் பொன்முடி பொதுக்கூட்டத்தில் பேசிய ஆபாசமான பேச்சு சர்ச்சையான நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாமக்கல்லில் எம்.பி.,வீட்டில் திடீர் தீ விபத்து- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

நாமக்கல் கொ.ம.தே.க எம்.பி. வீட்டில் திடீர் தீவிபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏழைகளுக்கு மருத்துவமனை கட்ட நினைத்த பெண் மருத்துவர்...ரூ.10 கோடி சொத்தை ஏமாற்றிய மோசடி கும்பல்

பல ஐஏஎஸ் அதிகாரிகளையும், கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த நபர்களையும் தெரியும் எனக் கூறி உதவுவதாக ஆசை வார்த்தை காட்டியதாக தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு...இபிஎஸ் கண்டனம்

விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டவர முடியாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. மீண்டும் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடி!

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

அஜித்தின் குட் பேட் அக்லிக்கு வாழ்த்து சொன்ன நடிகர் ரஜினி

ஜெயிலர் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கியுள்ளோம் என்று ரஜினி தெரிவித்தார்