K U M U D A M   N E W S

தலைவர்

சாதிவாரி சர்வே என்றால் முதல்வருக்கு கசப்பது ஏன்? - அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே உடனடியாக நடத்த வேண்டும் எனவும், சாதிவாரி சர்வே என்றால் முதல்வருக்கு கசப்பது ஏன்? எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்விஎழுப்பியுள்ளார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு கண்துடைப்பாக இருக்கக்கூடாது.. விஜய் வலியுறுத்தல்

"மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும்" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் உளவுத்துறை MI6 அமைப்பு... முதல்முறையாக பெண் தலைவர் நியமனம்..!

இங்கிலாந்து உளவுத் துறையின் MI6-க்கு தலைவராக முதல்முறையாக பிளேஸ் மெட்ரெவேலி என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் அரசு உளவுத்துறைக்கு ஒரு பெண் தலைவரை நியமிக்கப்படுவது வரலாற்றுச் சாதனையாக பார்க்கப்படுகிறது.

சமுதாயத்திற்கு, கட்சிக்கும் நான் துரோகம் செய்ய மாட்டேன் - அன்புமணி ராமதாஸ் பேச்சு

என்னுடைய கட்சிக்கும், என்னுடைய சமுதாயத்திற்கும், நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் திமுக 50 தொகுதிகளை இழக்க நேரிடும் - ஐபெக்டோ செயலாளர் அண்ணாமலை எச்சரிக்கை

அரசு ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 50 தொகுதிகளை இழக்க நேரிடும் என்று ஐபெக்டோ சங்கத்தின் அகில இந்திய தேசிய செயலாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார் - ஜவாஹிருல்லா விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்பட்டு வருகிறார் என்று மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணைந்த ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை

தவெகவில் இணைந்த ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா்.

தவெகவில் அதிருப்தி..? அறிவாலயத்தில் ஆனந்தம்..? திமுகவின் அடுத்த மூவ்!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிருப்தி நிர்வாகிகளில் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருவது அறிவாலய வட்டாரத்தில் ஆனந்தத்தை பொங்கச் செய்திருப்பதாக கூறப்படுகிறது இதனால் அந்த அதிருப்தி நிர்வாகிகளில் பட்டியல திமுக கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது

தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் முப்படைக்கு தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாம் - தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கம்

நாட்டின் முப்படை தளபதிகள் வீரர்கள் ஆகியோர் உயிரை பணயம் வைத்து ஆபரேஷன் சிந்தூரை நடத்திக் காண்பித்துள்ள நிலையில் மதுரை தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் முப்படையை பாராட்டி ஒரு தீர்மானமாவது நிறைவேற்றி இருக்கலாம் என்று பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநரமான தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் பழங்குடியினர் மீது மனித உரிமை மீறல்..சென்னையில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து நக்சல்களை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் பழங்குடி மக்களை வேட்டையாடும் நடவடிக்கையை கண்டித்து நாளை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக மாமல்லபுரத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு 110 விழுக்காட்டிற்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு!

சென்னையில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 110 விழுக்காட்டிற்கு மேல் அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது - கீ. வீரமணி

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய அரசு எடுத்த சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என்று திராவிட கழக தலைவர் கீ. வீரமணி தெரிவித்துள்ளார்.

நான் தான் தலைவர் பாமகவுக்கு தலைவர் - அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்

ராமதாஸ் தனது கொள்கை வழிகாட்டி மட்டுமல்ல - குலதெய்வம் என தெரிவித்துள்ள அன்புமணி, பாமகவுக்கு தானே தலைவர் எனவும் அறிவித்துள்ளார்.

கோலடி திட்டத்தை மாற்றம் செய்ய முதலமைச்சரால் மட்டுமே முடியும் - திருமாவளவன்

திருவேற்காடு கோளடி கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் திட்டத்தை மாற்றம் செய்வதற்காக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து இடமாற்றம் செய்யப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

பூஞ்ச் மக்கள் மறுவாழ்வு.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

"பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பூஞ்ச், ஜம்மு காஷ்மீருக்கு மறுவாழ்வு தொகுப்பு வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

தவெக பெண் நிர்வாகி மீது காவல்துறை தாக்குதல்.. தமிழ்நாடு முஸ்லிம் லீக் கண்டனம்!

தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடும்ப சுயநலத்திற்காக பாஜகவிடம் திமுக அடைக்கலம்- விஜய் கடும் விமர்சனம்

ஆளும்கட்சியாக இருக்கும்போது கைகுலுக்கி காலில் விழுவதும்தான் இந்த கபட நாடக தி.மு.க. தலைமையின் பித்தலாட்ட அரசியல் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்காதது அடையாள போராட்டம் - திருமாவளவன்

நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஐ.ஆர்.எஸ் To அரசியல்: தமிழ்நாட்டில் மாற்றத்தை உருவாக்கப்போகிறாரா அருண்ராஜ்!

மத்திய அரசின் வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேகர் ரெட்டியை கதறவிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி திராவிட கட்சிகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

பல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் துறை தலைவர் பணியிடமாற்றம் - மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு

சென்னை பல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் துறை தலைவர் இருளாண்டி பொன்னையா, புதுக்கோட்டை அரசு பல் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்து, மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் திருச்சி பேரணி அமைய வேண்டும் - திருமாவளவன்

திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்...படக்குழு வெளியிட்ட போஸ்டர்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் 267 தலைவராக 14ஆம் லியோ பதவியேற்பு!

கத்தோலிக்க திருச்சபையின் 267-வது தலைவராக தேர்வு செய்யப்பட்ட 14 ஆம் லியோ புதிய போப்பாக வத்திகானில் இன்று (மே 19 ) பதவியேற்றார். வாடிகனில் நடைபெற்ற விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை...விஜய் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.