K U M U D A M   N E W S
Kumudam Ad

அன்னை இல்லம் தொடர்பான வழக்கு.. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்டோகிராஃப் மறுவெளியீட்டுத் தேதி...சேரன் கொடுத்த அப்டேட்

இயக்குநர் சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் மறுவெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பதாகை ஏந்திய அதிமுக உறுப்பினர்கள்... சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற்ற சபாநாயகர்!

சட்டப்பேரவையில் பதாகை ஏந்தியதாக அதிமுக உறுப்பினர்கள், கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அந்த உத்தரவை சபாநாயகர் திரும்பப் பெற்றார்.

டாஸ்மாக் விவகாரம்: திமுகவுக்கு ஏன் அச்சம் – இபிஎஸ் சரமாரி கேள்வி

டாஸ்மாக் விவகாரத்தில் திமுக அரசு தவறு செய்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் - சபாநாயகர் அப்பாவு

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுத்ததை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

96 அடி உயரம். 350 டன் எடை.. கோலாகலமாக தொடங்கியது திருவாரூர் ஆழித் தேரோட்டம்..!

உலகப் புகழ் பெற்ற 96 அடி உயரமும், 350 டன் எடையளவும் கொண்ட திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் 2000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மலையாள திரையுலகில் முதன்முறையாக..புதிய வரலாறு படைத்த 'எம்புரான்' திரைப்படம்!

பிருத்திவிராஜ் - மோகன்லால் கூட்டணியில் வெளிவந்த எல்-2: எம்புரான் திரைப்படம் மலையாள திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

திருச்சி, கோவை என அடுத்தடுத்து தொடரும் ED RAID.. கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டிலும் சோதனை!

திருச்சியில் உள்ள அமைச்சர் கே.என். நேரு மற்றும் கோவையில் மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அவரது சகோதரர் மணிவண்ணன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமான நிறுனங்களில் ED சோதனை!

சென்னையில் அமைச்சர் கே.என். நேரு மகன் அருண் மற்றும் அவரது சகோதரர் கே.என். ரவிசந்திரனுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.