K U M U D A M   N E W S
Kumudam Ad

"எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!" - முதல்வர்

இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

”அப்படி செய்ய வேண்டிய தேவை எனக்கில்லை” – திருமாவளவன்

"இந்தி மொழி மீது விசிகவுக்கு வெறுப்பு இல்லை" என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிகாலையிலேயே 'Get Out Stalin' என்று பதிவிட்ட அண்ணாமலை

'Get Out Modi' திமுகவினர் ட்ரெண்ட் செய்து வந்த நிலையில், இன்று காலை 6 மணிக்கு 'Get Out Stalin' என்று அண்ணாமலை பதிவிட்டு இருக்கிறார்

பள்ளி, கல்லூரிகளின் சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா..? விளக்கமளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை" - புதிய தமிழகம் நிறுவனர்

"புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்" என்று புதிய தமிழக நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் - நடிகை விஜயலட்சுமி

சீமான் மீதான வழக்கை முடித்து வைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில்,  நீதிமன்றத்திற்கு தான் முழு ஒத்துழைப்பு தருவேன் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.  

கோவிலில் பிரச்னை ஏற்படுத்த முயற்சித்தால் வழக்குப் பதிவு - சென்னை உயர்நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல் துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூத்த மருத்துவர்களை பணியில் நியமிக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்,  கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க, பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும் என  தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வேலை வாங்கி தருவதாக 50 லட்ச ரூபாய் வரை மோசடி... முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி 50 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவியின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கையால் ஏழை மாணவர்களின் கல்வி இல்லாமல் போய்விடும் - இரா.முத்தரசன் வேதனை

புதிய கல்விக்கொள்கையில் தற்போது 3-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 4-ம் வகுப்பு செல்ல முடியும். அதேபோல், 5-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 8-ம் வகுப்புசெல்ல முடியும் என உள்ளது. இந்த நிலையை அமல்படுத்தினால் 75 சதவீத மாணவர்கள் கல்வியை இடை விட்டு சென்று விடுவார்கள். ஏழை மாணவர்களின் கல்வி இல்லாமல் போய்விடும். இதற்கு தான் மும்மொழிக் கொள்கையை கொடுக்காமல் புதிய கல்வியை ஏற்காமல் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தஞ்சையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.