K U M U D A M   N E W S

கோவையில் காவல் நிலையத்தில் தற்கொலை: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கோயம்புத்தூர் கடைவீதி காவல் நிலையத்தில் ஒரு நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம்குறித்த சிசிடிவி காட்சிகளைக் காவல் துறை வெளியிட்டுள்ளது.

சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் 11 நாள் குழந்தை விற்பனை முயற்சி: இடைத்தரகர் கைது!

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இடைத்தரகர் ஆனந்தி சிந்து என்ற வீரம்மாளை (32) காவல்துறையினர் கைது செய்தனர்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகப் புகார்.. காவல்துறையினர் விசாரணை!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி, கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடைபயிற்சியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.யிடம் தங்கச் சங்கிலி பறிப்பு.. காவல்துறையினர் விசாரணை!

டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சாமி கும்பிட கூடாதுன்னு சொல்ல இது என்ன மன்னர்காலமா..?" -கொட்டும் மழையில் மறியலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்த போலீஸ்

கோயிலில் சாமி கும்மிடக்கூடாது என கூறியதால் கொட்டும் மழையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டினர்

ரயில் நிலையத்தில் குற்றவாளி தப்பி ஓட்டம்.. பொதுமக்களிடம் தகவலளிக்கக் காவல்துறை கோரிக்கை!

Criminal escapes from railway station | ரயில் நிலையத்தில் குற்றவாளி தப்பி ஓட்டம் பொதுமக்களிடம் தகவலளிக்கக் காவல்துறை கோரிக்கை | Police request information from the public!

மல்லை சத்யா மீது அவதூறு வழக்கு – மதிமுக வழக்கறிஞர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார்!

மதிமுக கட்சி, கட்சி தலைவர், கட்சி கொடி ஆகியவற்றிற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது மதிமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம்: அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்!

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கி, அதில் ஏ-320 ரக விமானங்களை இயக்கும் நோக்கில் புதிய ஓடுபாதை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்படுவதாக இந்தியாவின் சிவில் விமானத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி

வருசநாட்டில் இருந்து மலைப்பகுதி வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 3 நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி