ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதான 8 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்... அடுத்தது என்ன?... போலீசார் விளக்கம்!
''ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துதான் குற்றவாளிகளை பிடித்துள்ளோம்''
''ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துதான் குற்றவாளிகளை பிடித்துள்ளோம்''
ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார்.
ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்பிறகு பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 10 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. ''ஆனால் உண்மையான குற்றாவளிகளை போலீசார் கைது செய்யவில்லை'' என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
''ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்துக்கும், அவரது கட்சி தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்''
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சமூக சேவையில் ஈடுபட்டு பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர் என்றும் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் தொடர்பான கொலை இல்லை என்றும் ஆம்ஸ்ட்ராங்கிற்கு கொலை மிரட்டல் இருப்பதாக காவல் துறையினருக்கு எந்தவித தகவலும் வரவில்லை என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும், கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஜாதி ரீதியான படுகொலைகளும் தலித் தலைவர்களை குறி வைத்து படுகொலை சம்பவங்களும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.