Edappadi Palanisamy About Vijay : இதனை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். விஜய் சாரிடம் கேளுங்கள் என்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் மரியாதை. சேலத்தில் பெரியாரின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
ஆண் நண்பருடன் சென்றதை வீடியோ எடுத்து, அதைக் காட்டி மிரட்டி சிறுமியிடம் தனது பாலியல் இச்சையைத் தீர்க்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அம்மாவிடம் சொல்லி விடுவேன்... 5 நிமிஷம் தொட்டுக்கிறேன் என்று இளைஞர் பேசி மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Tamil Nadu CM Stalin Return From America : ’முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் எதிர்பார்த்த முதலீடுகள் வரவில்லை’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பான கேள்விக்கு பதில் கூறிய மு.க.ஸ்டாலின், ’இது அரசியல் நோக்கத்தோடு கூறப்படும் குற்றச்சாட்டு’ என்று தெரிவித்தார்.
''ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டத்திற்கும் சென்று வளர்ச்சி கூட்டத்தில் கதாநாயகன் போல் ஆய்வு செய்ய யார் உரிமை கொடுத்தது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது. அரசியலில் உள்ளே வரும் அவருக்கு இளைஞர் பட்டாளம் ஆதரவாக உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரன் விஜய்யின் தவெக கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ளார்
தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 1,331 விடுதிகளில் 98,909 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். ஆதிதிராவிடர் மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற சூழல் இருக்கும் நிலையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை ஆதாரமற்றது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
RS Bharathi : மணிப்பூர் உத்திரபிரதேசம் குஜராத் மாநிலத்தில் உள்ள சம்பவங்களை விட, தமிழகத்தில் பெரிதாக ஒன்று குற்றசம்பவங்கள் நடக்கவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தஞ்சை பூதலூரில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்கள் நடமாடவே முடியாது அளவுக்கு பாதுகாப்பு கொஞ்சமும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்
2020ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு மீது தமிழக அரசு, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 31 பேர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Sellurraju vs Saravanan: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மாவட்டச் செயலாளர் பதவிக்கு டாக்டர் சரவணன் குறிவைத்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவலால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Seeman Press Meet: தமிழ்நாட்டில் நடக்கும் ஃபார்முலா 4 கார் ரேஸ் குறித்தும், முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்தும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தங்களது கொள்கையை கல்வித்துறையில் திணித்து மனித வளத்தை குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Palani girivalam Path encroachments: பழநி கிரிவல பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவிட்டதா என குழு ஆய்வு செய்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு
''தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக ஆக்குவதற்கு இந்து அறநிலையத் துறை உறுதியாக முன்வரவேண்டும். கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.