திடீரென சரிந்து விழுந்த புறக்காவல் நிலையம். மெரினாவில் பரபரப்பு
புயல் காரணமாக அதிவேகமாக காற்று வீசியதால் சென்னை மெரினா புறக்காவல் நிலையம் சரிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புயல் காரணமாக அதிவேகமாக காற்று வீசியதால் சென்னை மெரினா புறக்காவல் நிலையம் சரிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஃபெஞ்சல் புயல் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள பேருந்து நிலையத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
புயல் கரையை கடந்தபோது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 110 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் - வானிலை ஆய்வு மையம்
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இன்று இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை பெரம்பூர் ஜமாலியாவில் நீரில் மூழ்கிய சாலைகள்
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் சூழலில், கடல் நீர் மீனவ கிராமங்களுக்குள் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.