K U M U D A M   N E W S

தயாரிப்பில் சுதந்திரம் இல்லை.. தயாரிப்பு நிறுவனத்தை மூடிய இயக்குநர் வெற்றிமாறன்!

திரைப்பட தயாரிப்பில் சுதந்திரம் இல்லை என்று இயக்குநர் வெற்றிமாறன் தனது க்ராஸ் ரூட்ஸ் ஃபிலிம் கம்பெனியை மூடுவதாக அறிவித்துள்ளார்.

தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் இன்று காலையிலிருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கேரள நடிகர் சங்கம்: வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நடிகை ஸ்வேதா மேனன்!

31 ஆண்டு கால கேரள நடிகர் சங்கத்தின் வரலாற்றில் முதல் முறையாக, பெண் ஒருவர் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

காஷ்மீரில் 35 ஆண்டுகளுக்கு முன் பெண் கொலை- குற்றவாளிகளைத் தேடி களமிறங்கிய புலனாய்வு அமைப்பு

மத்திய காஷ்மீரில் பல இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பு குற்றவாளிகளை தேடி அதிரடி சோதனைகளை நடத்தியது.

மெட்டாவில் 24 வயது இளைஞருக்கு ரூ. 2,196 கோடி சம்பளம்.. மாட் டீட்கேவின் திறமையை நம்பும் மெட்டா!

மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், மாட் டீட்கே என்ற 24 வயது இளைஞரை 4 வருடங்களுக்கு ரூ. 2,196 கோடி சம்பளத்தில் மெட்டாவில் பணியமர்த்தியுள்ளார்.

கோவையில் 11 நாள் குழந்தை விற்பனை முயற்சி: இடைத்தரகர் கைது!

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இடைத்தரகர் ஆனந்தி சிந்து என்ற வீரம்மாளை (32) காவல்துறையினர் கைது செய்தனர்.

பெண்களுக்கு தேவையான கல்வியை கொடுக்க வேண்டும் – நடிகை தேவயானி

வரதட்சணை வாங்குவது குற்றம் என்பதை படத்தில் மூலமாகவே நாங்கள் சொல்லியுள்ளோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தன்னம்பிக்கையுடன் தைரியமாக இருக்க சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என நடிகை தேவயானி கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி!

கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் அரசுப் பேருந்துகள் ஓடாததால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா..நீரோடைகளில் நீராடி சிறப்பு வழிபாடு!

காவிரி கரையோரப் பகுதிகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா, உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் அதிகார துஷ்பிரயோகம்.. காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்!

பிகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழக்கும் அதேநேரத்தில், தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 6.5 லட்சம் பேர் வாக்காளர்களாகச் சேர்ப்பது ஆபத்தானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.