K U M U D A M   N E W S

மக்கள்

தொடரும் அறிவிக்கபடாத மின்வெட்டு.. நள்ளிரவு வேளையில் பொதுமக்கள் தீடீர் சாலை மறியல்!

காஞ்சிபுரம் பகுதிகளில் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டை கண்டித்து அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு பிரதான சாலையில் நள்ளிரவு வேளையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூரில் சிமெண்ட் ஆலையை பொதுமக்கள் போராட்டம்.. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

அரியலூரில் டால்மியா சிமெண்ட் ஆலையை முற்றுகையிட்டு கிராம பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலைக்கு சாதகமாக காவல்துறையினர் பேசியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

உலகளவில் அதிகரித்த இஸ்லாமியர்கள்..! குறைந்த கிறிஸ்துவர்கள்..! இந்துக்கள் எவ்வளவு தெரியுமா? வெளியான சர்வே ரிப்போர்ட்..!

உலக மக்கள் தொகையில் அதிகளவில் இருந்த கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையானது பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், இஸ்லாமியர்களின் எண்ணிக்கையானது முன்பைவிட அதிகரித்துள்ளதாகவும் சர்வே ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார் - ஜவாஹிருல்லா விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்பட்டு வருகிறார் என்று மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

ரூ.5 பார்லே ஜி 2,400 ரூபாய்க்கு... நிவாரணமா? ரத்தம் உறுஞ்சும் மிருகமா? மிரளவைக்கும் காசாவின் விலை உயர்வு

இந்தியாவில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட்டை, காசாவில் வசிப்பவர்கள் இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கு வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருபுறம் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலாலும், மறுபுறம் பசி பட்டினியாலும் காசா மக்கள் செத்து மடியும் நிலையில், அங்குள்ள உணவு தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது உலகளவில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைத்து பாஜக சதி - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைத்து சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை - அமைச்சர் சுப்ரமணியன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், இணை நோய் பாதிப்பு இருப்பதாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சீர்மிகு சிறுநீரக மருந்து திட்டத்தில் மக்கள் பயன் பெற நகரத்திலும் டயாலிசஸ் செய்யும் வசதியை கொண்டு செல்ல இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் பழங்குடியினர் மீது மனித உரிமை மீறல்..சென்னையில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து நக்சல்களை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் பழங்குடி மக்களை வேட்டையாடும் நடவடிக்கையை கண்டித்து நாளை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக மாமல்லபுரத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டையில் மாற்றப்பட்ட பேருந்து நிலையம்... அல்லோலப்படும் மக்கள்

அருப்புக்கோட்டையில் புதிதாக ஸ்மார்ட் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அடிப்படை வசதிகளில் இல்லாமல் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.

பூஞ்ச் மக்கள் மறுவாழ்வு.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

"பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பூஞ்ச், ஜம்மு காஷ்மீருக்கு மறுவாழ்வு தொகுப்பு வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தலைநகர் டெல்லியில் விடிய விடிய கனமழை பெய்ததால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தலைநகரின் இயல்புநிலை கடும் பாதிப்புக்குள்ளானது.

ஐ.ஆர்.எஸ் To அரசியல்: தமிழ்நாட்டில் மாற்றத்தை உருவாக்கப்போகிறாரா அருண்ராஜ்!

மத்திய அரசின் வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேகர் ரெட்டியை கதறவிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி திராவிட கட்சிகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

மேட்டுப்பாளையம்-அவிநாசி சாலை திட்டம்: எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் 17 பேர் கைது!

மேட்டுப்பாளையம்-அவிநாசி நான்கு வழி சாலை விரிவாக்க திட்டத்திற்காக மரத்தை வெட்டுவதற்காக வந்த ஜே.சி.பி இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். நில அளவை செய்யாமல் மரத்தை வெட்டக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

தென்காசி மாவட்டத்திற்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

முதலமைச்சருக்காக நாங்கள் காத்திருக்க வேண்டுமா? – பெண்கள் போலீசாருடன் வாக்குவாதம்!

முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்வதற்காக நீண்ட நேரம் பேருந்தில் காக்க வைத்ததால் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ஜிவி பிரகாஷுன் “இம்மார்டல்” பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

நாட்டை காப்பாற்றிய எனக்கு இந்த நிலைமையா?- மாவட்ட ஆட்சியர் முன் கதறிய முன்னாள் ராணுவ வீரர்

பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாத்துறாங்க, புகார் கொடுத்தால் காவல்துறை என்னையே மிரட்டுராங்க. கஷ்டப்பட்டு நாட்டை காப்பாற்றிய எனக்கு இந்த நிலைமையா என மாவட்ட ஆட்சியர் முன் கதறிய முன்னாள் ராணுவ வீரரால் பரபரப்பு

சாதிவாரி கணக்கெடுப்பு...தேர்தலுக்கான அறிவிப்பு இல்லை- பொன்.ராதாகிருஷ்ணன்

வருடத்திற்கு ஒரு தேர்தல் வரும், அதனை கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட விசயம் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை.

வேலூரில் உடலை எரிக்க வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...விசாரணை நடத்தப்படும் என மாநகராட்சி விளக்கம்

வேலூரில் உடலை எரிக்காமலேயே அஸ்தி வழங்குவதாகவும், உடலை வைத்து ஏதோ தவறு நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

கூடுதல் கண்காணிப்பு:“காஷ்மீர் மக்களை நினைத்தால்...”– நடிகை ஆண்ட்ரியா வேதனை

தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நினைத்து என் மனம் உடைந்து போனது

சென்னையில் நள்ளிரவில் மின்வெட்டு...ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதி

கோயம்பேட்டில் இருந்து மதுரவாயலுக்கு வரும் 33 கிலோ வாட் உயிர் அழுத்த கேபிளில் ஏற்பட்ட பழுதால் மின்வெட்டு

அங்காடி மையம் புதுப்பிப்பு.. குழந்தைகளுக்கு சீர்வரிசை !

பல வருடங்களாக சிலதமடைந்து கிடந்த அங்காடி மையத்தை புதுப்பித்து சீர்வரிசையாக, குழந்தைகளுக்கு உபகரணங்கள் கொண்டு கட்டிடத்தை பொதுமக்களுடன் இணைந்து காவலர்கள் திறந்து வைத்தனர்.

கடலோர மக்களுக்காக குரல் கொடுத்த ரஜினிகாந்த்...வீடியோ வெளியிட காரணம் இதுதானா...

கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

TATA IPL 2025: நம்ம சென்னை, நம்ம பாதுகாப்பு.. ‘‘சென்னை சிங்கம் IPL QR குறியீடு’’ அறிமுகம்!

சென்னை காவல் துறையின் சார்பில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘‘சென்னை சிங்கம் IPL QR குறியீடு‘‘ என்ற நவீன வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.