K U M U D A M   N E W S
Promotional Banner

மின்சார வாகனம் வாங்க அரசு மானியம்; டைம் கம்மியா இருக்கு மிஸ் பண்ணிடாதீங்க!

EMPS 2024 Central Government Scheme Extend : புதிதாக மின்சார வாகனங்கள் வாங்க நினைக்கும் நபர்களுக்காகவே மின்சார இயக்க ஊக்குவிப்பு திட்டத்தை (EMPS 2024) செப்டம்பர் 30ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

மமதா பானர்ஜி பாதியில் வெளியேறினாரா?.. நடந்தது என்ன? நிதி ஆயோக் தலைவர் விளக்கம்!

Niti Aayog Chairman On Mamata Banerjee : ''பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று கூறினேன். என்னை 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். கூடுதல் நேரம் பேச விரும்பியபோது என்னை பேச விடாமல் எனது மைக் இணைப்பை துண்டித்தனர்'' என்று மமதா பானர்ஜி குற்றம்சாட்டி இருந்தார்.

'முதல்வர் ஸ்டாலின் வழியை பின்பற்றுங்கள்'.. பிரதமர் மோடிக்கு தயாநிதி மாறன் அட்வைஸ்!

MP Dayanidhi Maran : ''தமிழ்நாட்டுக்கு வந்து தமிழை கற்க வேண்டும் என்றும் திருக்குறளை புகழ்ந்தும் பேசிய பிரதமர் மோடி இப்போது பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மறந்து விட்டார். பிரதமர் மோடி செய்த துரோகத்தை தமிழ்நாடு மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்'' என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

'மெல்ல மெல்லத் தெரிந்து கொள்வீர்கள்'.. பாஜகவுக்கு நிதிஷ்குமார் மறைமுக எச்சரிக்கை?

Bihar CM Nitish Kumar : பீகாருக்கு சிறப்பு நிதி ஓதுக்கியதால் நிதிஷ்குமார் ஒருபக்கம் மகிழ்ச்சியில் இருந்தாலும், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று மத்திய அரசு கைவிரித்து விட்டதால் மறுபக்கம் அவர் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா?.. வைகோ, சீமான் ஆவேசம்.. மத்திய அரசுக்கு கண்டனம்!

''பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும்தான் இந்தியாவில் உள்ளனவா? இதர மாநில மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லையா? அல்லது வரி செலுத்தவில்லையா?'' என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியா?.. பாஜகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

''வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

'மகிழ்ச்சியாக அல்வா சாப்பிடுங்கள்'.. பிரகாஷ் ராஜ் கிண்டல் பதிவு.. எதுக்கு தெரியுமா?

Actor Prakash Raj Criticize on Union Budget 2024 : பட்ஜெட்டில் ஆந்திரா, பீகாருக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் முற்றிலுமாக புறக்கணிப்பட்டுள்ளன என்று பொருள்படும் வகையில் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரலாம்.. தடையை நீக்கிய மத்திய அரசு.. வலுக்கும் எதிர்ப்பு!

Govt Employees Can Join RSS Organization : ''அரசு ஊழியர்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் ஒருபோதும் ஒன்று சேர முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மோடி அரசு இந்த தடையை நீக்கவில்லை. ஆனால் இப்போது நீக்க என்ன காரணம்?'' என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறியுள்ளார்.

யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா.. 'எங்கேயோ இடிக்குதே'.. இதுதான் காரணமா?

UPSC Chairman Manoj Soni Resign : மனோஜ் சோனி கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் யுபிஎஸ்சி தலைவராக பொறுப்பேற்ற நிலையில், வரும் 2029ம் ஆண்டு வரை இவரது பதவிக்காலம் உள்ளது. ஆனால் இவர் திடீரென ராஜினாமா செய்தது ஏன்? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லை.. கைவிரித்த தமிழ்நாடு அரசு... என்ன காரணம்?

கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன், மாநில அரசின் 40% நிதி பங்களிப்புடன் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்த விதிமுறையை தற்போது மத்திய அரசு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் எதிர்ப்பு அலை... 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படுமா?... உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு காண வேண்டும் என கேரள சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

'இந்தி பேசாத மாணவர்களுக்கு அநீதி'... பொங்கிய சு.வெங்கடேசன்... மத்திய அமைச்சருக்கு அவசர கடிதம்!

''சிபிஎஸ்இ நியமன தேர்வில் இந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த தேர்வர்கள் குறைந்தபட்சம் 10% முதற்கட்ட தேர்விலேயே இழந்து இரண்டாம் கட்ட தேர்வுக்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பறி கொடுப்பார்கள்''

மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல்... நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள் நடக்கும்? முழு விவரம்!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார்.

'நீட்' தேர்வு முறைகேடு வழக்குகள்... ஜுலை 8ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகளும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்... பல்வேறு விஷயங்களில் அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டம்!

டெல்லி: 2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்தன...எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு... சிறப்பம்சங்கள் என்னென்ன?

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று முதல் அமலாகி உள்ளது.