K U M U D A M   N E W S

புதுச்சேரியில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..

புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரசு அறிவித்தபடி தீபாவளி மானிய பொருட்கள் வழங்கக்கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜவுளி வியாபாரிகள் சாலை மறியல்.. ஈரோட்டில் பயங்கர பரபரப்பு

ஈரோட்டில் மாநகராட்சி ஜவுளி வணிக வளாக வியாபாரிகள், சாலையோர ஜவுளி கடைகளால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூரில் திடீரென போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் அரசு துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரக்கோரி பள்ளி மாணவர்களும், பெற்றோரும் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

#BREAKING || ஊதியம் வழங்காததால் சாலை மறியல்

திருவண்ணாமலை அருகே ஊதியம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல். மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலம்புதூர் கிராமத்தில் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது

மருத்துவர்கள் அலட்சியம்.. பறிபோன உயிர்? போராட்டத்தில் இறங்கிய பாமகவினர்

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வலிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் ரமேஷ் உயிரிழந்ததாக பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செவி சாய்க்காத சாம்சங் நிறுவனம்.. சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள்

காஞ்சிபுரம் தேரடி பகுதியில் சாம்சங் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு சமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

”3 மாசமா தண்ணி வரல.. ” காலிக்குடங்களுடன் போராட்டத்தில் குதித்த பெண்கள்

புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் ஊராட்சி தேனீப்பட்டி பகுதியில் 3 மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுட்டனர்.

Bus Accident : அரசு பேருந்து அலட்சியம்... அப்பாவி குழந்தை பலி

Nagapattinam School Student Dies in Govt Bus Accident : நாகை அருகே குருக்கத்தி பைபாஸ் சாலையில் அரசு பேருந்து மோதி 11ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவியுடன் வந்த அவரது தம்பி படுகாயங்களுடன் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Toll Booth : சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்

Toll Booth Protest in Namakkal : நாமக்கல் அருகே ராசம்பாளையம் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

மஞ்சுவிரட்டில் முன்விரோதம்.. இருபிரிவினர் இடையே கடும் மோதல்.. சாலை மறியலால் பரபரப்பு

மதுரை வாடிப்பட்டி அருகே மஞ்சுவிரட்டு நடத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.