Weather Update - 16ஆம் தேதி வரை வெளுத்து வாங்கப்போகும் கனமழை
இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் வரும் 16 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாமதமான அறிவிப்பு காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறையா, இல்லையா என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இரவு முதல் தொடர்ந்து பரவலாக மழைபெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு பெய்த கனமழையை அடுத்து, அதிகபட்சமாக நந்தனத்தில் 4.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கனமழை காரணமாக சென்னையில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையில் கிண்டி, திருவான்மியூர், எழும்பூர், புரசைவாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என வெதர்மேன் ஜான் பிரதீப் தகவல்
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அரசு சமாளிக்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி தெரிவித்துள்ளார்.