K U M U D A M   N E W S
Advertisement

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கோலாகலம்!

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான விழா ஏப்ரல் 2ம் தேதி தொடங்கிய நிலையில், நாள்தோறும், பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

கபாலீஸ்வரர் கோயில் கோலாகலமாக தொடங்கிய தேரோட்டம்.. அரோகரா கோஷங்களுடன் தேரை இழுத்த பக்தர்கள்!

சென்னையில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் கூடி அரோகரா கோஷங்களுடன் தேரை வட்டம் பிடித்து இழுத்தனர்.

மதுர குலுங்க...குலுங்க...மே12ம் தேதி கள்ளழகர் சித்திரைத் திருவிழா

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் தங்ககுதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் மே மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

தர்பூசணி விவசாயிகளுக்காக சீமந்த விழாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!

ஜெயங்கொண்டம் அருகே தர்பூசணி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சீமந்த விழாவில் 700 பேருக்கு தர்பூசணி வழங்கி, விவசாயத்தை ஊக்குவித்த மருத்துவ தம்பதிகளின் செயலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பங்குனி திருவிழா.. இந்து பக்தர்களுக்கு குடிதண்ணீர் வழங்கிய இஸ்லாமியர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி ஊர்வல வைபத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குடி தண்ணீர் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது.

கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா.. 2 மாநில மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை!

கேரள மாநிலம் தேக்கடியில், கண்ணகிகோவில் சித்திரை முழு நிலவு விழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் பங்கேற்றனர்.

பண்ணாரி மாரியம்மன் கோயில் 'குண்டம்' திருவிழா இன்று தொடக்கம்!

லட்சக்கணக்கான பக்தர்கள்  தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தும் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

Temple Function | பாடை கட்டி, படுக்க வைத்து விநோத திருவிழா.. | Maha Mariamman Temple | Tiruvarur

பாடை கட்டி, ஒருவரை அதில் படுக்க வைத்து, இறுதிச்சடங்குகள் செய்து விநோத வழிபாடு

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் நால்வர் வீதியுலா .. பக்தர்கள் சாமி தரிசனம்,.!

திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் நடைப்பெற்று வரும் பங்குனி உத்திரபெருவிழாவில் பக்தோற்சவத்தை ஒட்டி நால்வர் வீதியுலா நடைபெற்றது.

8 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய பணி...தோடர் இன மக்களை வியந்து பார்த்த ஆட்சியர்

தோடர் பழங்குடியின இளைஞர்கள் இளவட்ட கல்லை தூக்கி அசத்தினர். இதனை தொடர்ந்து தங்களது பாரம்பரிய உடை அணிந்து, பாரம்பரிய நடனம் ஆடியதை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணிரூ மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.